26 May 2006

கலைஞர் மீது தாக்குதல் - சதிவேலையா?

இன்று(26/5/2006) சட்டமன்றத்தில் நடைபெற்றிருக்கும் நிகழ்வுகளைப் பார்க்கையில் பல சந்தேகங்கள் எழுகின்றது.

நண்பர் லக்கிலுக் பதிவான கலைஞரைத் தாக்க முயற்சி! -யில் நான் எழுதிய பின்னூட்டத்தை இங்கே தருகிறேன்.

>> ஒரு டஜன் ரவுடிகளுக்கு மேல் சட்டசபைக்கு அனுப்பி இருக்கும் தாதா ஜெயா தன் அடியாட்களுக்கு கொடுத்திருந்த அசைன்மெண்ட் இன்று வெற்றிகரமாக சட்டசபையில் முறியடிக்கப்பட்டிருக்கிறது.... >>

இந்த "சொர்ணக்கா" ஜெயா மாமி 1989-90-இலும் இதைத்தான் செய்தார்!

கலைஞர் படிக்கவிருந்த பட்ஜெட் பேப்பரைப் பிடுங்கிக் கொண்டு அவரை அடிக்கப் பாய்ந்துவிட்டு - பிறகு "அய்யயோ என்னை மானபங்கப் படுத்த முயற்சி" என்று நாடகம் போட்டார்.

அதைப் பார்ப்பனீயவாதிகள் பயன்படுத்தி எத்தனை கோயபெல்ஸ் பரப்புரை செய்தார்கள்?

இந்துத்துவவாத, பிற்படுத்தப்ப்பட்ட-ஒடுக்கப்பட்ட மக்களின் எதிர்ப்புவாத அரசியலை தமிழகத்தில் முன்னெடுக்க பார்ப்பனீயவாதிகள் செய்த சதியே ஜெ.வின் அதிமுக கட்சியின் தோற்றமும், வளர்ச்சியும், இருப்பும்.

தமிழர்கள் இனியாவது புரிந்து கொள்ளட்டும்.

கோபால்சாமியும், திருமாவும் - இன்னமும் அங்கே இருப்ப்து மாபெரும் இனத்துரோகத்தில்தான் போய் முடியும்.

இட ஒதுக்கீட்டுப் பிரச்சனை பற்றி ஒன்றும் பேசாத ஜெ. கலைஞரைத் தாக்க ஆள் அனுப்புகிறார் என்றால் - இதன் உள்ளர்த்தம் என்ன??


பார்ப்பனீயவாதிகள் - இட ஒதுக்கீட்டை ஆதரிக்கும் பிற்படுத்தப்பட்ட தலைவ்ர்களை - கொலை செய்யத் திட்டம் இடுகிறார்களா? என்ற சந்தேகம் மமிக மிக மிக கடுமையாக எழுகிறது.

இதன் விளைவுகளை அவர்கள் அனுபவித்தே ஆக வேண்டும்.

"பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைந்தால் சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு!"


பிற்சேர்க்கை:

அதிமுக அராஜகக் காட்சிகள்

அதிமுக அராஜகம்1

அதிமுக அராஜகம்2

அதிமுக அராஜகம்3

அதிமுக அராஜகம்4


( ஜெ.வை முன் வைத்து பெண்ணிய அரசியல் பேசுவோருக்கு இனிமேல் கெண்டைக்கால் மயிரளவும் மரியாதை தரத் தேவையில்லை. )

"க்ரீமி லேயர்" மோசடி?!

"க்ரீமி லேயர்" எனப்படும் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீட்டைத் தீர்மானிக்கும் திட்டம் பற்றிய இன்றைய தினகரனில் வெளிவந்திருக்கும் இதுதான் சமூக (அ)நீதியா? என்னும் கட்டுரை வாசிக்க நேர்ந்தது.

முதலில் வசதி படைத்த "முற்பட்ட வகுப்பினர்" இந்த "க்ரீமி லேயர்" திட்டத்தின் மூலம் "வடிகட்டப்பட்டு" ஏழைகளான "முற்பட்ட வகுப்பினருக்கு" கல்வி நிறுவனங்களில் இடம் வழங்கப்பட்டால் என்ன - என்று இந்தக் கட்டுரை கேள்வி கேட்கிறது! நியாயமான கேள்வி!

முதலில் 'முற்பட்ட வகுப்பாருக்கு' இந்தக் "க்ரீமி லேயர்' திட்டம் செயல்படுத்தப்பட்டுப் பார்த்துவிட்டு - எல்லா 'முற்பட்ட வகுப்பாருக்கும்' (அதாவது ஏழை மற்றும் பணக்கார முற்பட்ட வகுப்பார்) சமவாய்ப்பு அளிக்கப்பட்டு - எல்லா "முற்பட்ட வகுப்பாரையும்" ஒரே மாதிரியான சமச்சீர் பொருளாதாரக் குடும்பத்தினர் ஆக்கிவிட்டால் - அதன் பிறகு - இந்தத் திட்டத்தை - பிற்படுத்தப்பட்ட மற்றும் அட்டவணை வகுப்பாருக்குப் பயன்படுத்தி இடஒதுக்கீடு வழங்குவதைப் பற்றி சிந்திக்கலாம் என்கிற கருத்தை இந்தக் கட்டுரை தூண்டுகிறது!

ம்! நல்ல யோசனைதான்!

'முற்பட்ட வகுப்பாரே' - முதலில் உங்களில் "ஏழை" முற்பட்ட வகுப்புச் சகோதரர்களைக் கைதூக்கிவிட - இந்த அருமையான யோசனையை ஏற்றுக் கொள்வீர்களா? தயார்தானா? :)

24 May 2006

கமலின் "அணையா நெருப்பு!"

கமல்ஹாசனின் சிறுகதையான "அணையா நெருப்பு" இந்த வார விகடனில் வந்திருக்கிறது. இது பற்றி இணையத்தில் பல தமிழ், ஆங்கில வலைப்பதிவர்கள் சிலாகித்திருக்கிறார்கள்.

வழக்கம் போல சில இந்துத்துவ ஜாட்டான்கள்(!) இந்தக் கதையைப் படித்து கமலைக் கரித்துக் கொட்டுவதும் தெரிந்தது! இவர்களின் வயிற்றெரிச்சலை அதிகப்படுத்துவதை விடவும் நமக்கு வேறு மகிழ்ச்சி இல்லை என்பதால் - இந்தப் பதிவு!

கமலின் சிறுகதை அணையா நெருப்பு இங்கே!

23 May 2006

"மிஷன் ஏகலைவன்!"

பத்ரியின் இட ஒதுக்கீடு பற்றிய கவரேஜ் பதிவில் - என்னுடைய பின்னூட்டமாக இந்தப் பதிவில் எழுதியிருப்பதை இட்டேன். பிறகு இதையே ஒரு தனிப்பதிவாக போட்டு விடலாம் என்று தோன்றியது.

சுந்தரவடிவேல் அவர்கள் எழுதியுள்ள பதிவில் - IIT-யில்(பொதுவாக உயர்கல்வி நிறுவனங்களில்) நிலவும் பல வகுப்புவாரியான சமச்சீர்மையற்றதன்மையைப் பற்றிப் பல தகவல்கள் சொல்கிறார்.

இதற்கு முன்பு கூட குழலி அவருடைய 'ஐஐடி'-யின் உள்வட்ட விளையாட்டுக்கள் - என்கிற பதிவில் பல தகவல்கள் சொல்லியிருந்தார்.

ரவி போன்றவர்கள் இதற்கெல்லாம் எந்த ஆதாரமும் இல்லை என்றே இப்போது வரை சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சதீஷ் தேஷ்பாண்டே, யோகேந்திர யாதவ் எழுதிய 'தி ஹிந்து' கட்டுரையில்(ஒன்று | இரண்டு) :

" A rational and dispassionate analysis of this issue must begin with the one crucial fact that is undisputed by either side — the overwhelming dominance of upper castes in higher and especially professional education.

Although undisputed, this fact is not easy to establish, especially in the case of our elite institutions, which have always been adamant about refusing to reveal information on the caste composition of their students and faculty. "

என்கிறார்கள்!

என் கேள்விகள்/ ஐயங்கள் :

1. உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள மாணவர்கள் / ஆசிரியர்கள் / நிர்வாகிகள் - போன்றோரின் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் பற்றிய கணக்கெடுப்பைச் செய்வது அத்தனை கடினமானதா? - ஆம் என்றால் அதற்குக் காரணங்கள் என்ன?

2. அமைச்சர்கள் ஊழல், ரகசிய ஆவணங்களில் இருந்து தகவல்கள் பெறுதல், எம்பிக்களின் ஊழல், தொலைபேசி ஒட்டுக் கேட்டல் - போன்ற எத்தனையோ - "கடினமான" விஷயங்கள் தொழில்நுட்பத்தினால் சாத்தியமாகி இருக்கும் போது - இம்மாதிரியான உயர்கல்வி நிறுவனங்களின் இருப்போர் பற்றிய Social data-வை ஒரு "Mission Ekalavya (Ekalaivan!)" செய்து - எல்லாத் தகவல்களையும் ஒரு மாதத்துக்குள் பெற்று விட முடியாதா? (Legally or illegally - thru 'sting' operations!) - இதற்கெல்லாம் Ethan Hunt மாதிரி Undercover agent வேண்டுமா என்ன?

3. ஒரு 'வெளிப்படையான கொள்கையின்' அடிப்படையில் "இட ஒதுக்கீடு" கொண்டு வர வேண்டும் என்று அலம்பல் செய்யும் அறிவுஜீவிகள் - Why are they not Demanding that such Socially vital data about Higher educational Institutions be made public after collecting it thoroughly?

இதிலே என்ன ராணுவ ரகசியம் வேண்டிக்கிடக்கு?


4. "Right to Information act" படி யாருடைய வருமானவரியையும் யாரும் - தெரிந்து கொள்ள முடியும் என்கிற நிலை வரப் போகிறது என்கிறார்கள்; அப்படியானால் - இந்த விஷயத்தில் ஒரு PIL போட்டு - உடனே எல்ல உயர்கல்வி நிறுவனங்களும் இந்த வகுப்புவாரியான ஆசிரியர் மாணவர் பிரதிநிதித்துவம் என்ன? அவர்கள் நிறுவனத்தில் - என்பதை வெளியிட வேண்டும் - என்று உச்ச/உயர் நீதி மன்றங்களில் வழக்குத் தொடுக்க முடியாதா?


இனிமேல், "மிலிடெண்ட் சமூகநீதியாளர்" ஆக இருந்தாலே ஒழிய பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இந்தப் பார்ப்பனீய அரசாங்க இயந்திர இந்தியாவில் விமோசனம் கிடைக்கப் போவதில்லை.

எனவே, "நவீனயுக ஏகலைவர்கள்" கட்டைவிரலைக் கொடுப்பவர்களாக இல்லாமல் - தங்கள் சமூக முன்னேற்றத்தைத் தடுக்கும் அதிகார வெறிபிடித்த சனாதனக் கரங்களை ஒடிக்கிற வீரர்களாக மாறவேண்டும் - என்பது காலத்தின் கட்டாயம்.

20 May 2006

பெரியாரின் கடைசிக் கண்ணீர்!

" நான் 'சூத்திரன்' என்கிற இழிவு நீங்க வேறு வழி என்ன? நான் பிறக்கிறதற்கு முன்னேயே 'சூத்திரர்கள்' நீங்கள். நாளைக்குச் சாகப் போகிறேன். சூத்திரனாய் விட்டுவிட்டுத்தானே சாகிறேன். அப்புறம் என்ன என்னுடைய தொண்டு? நானும் போய் விட்டேனென்றால் அப்புறம் இதைப் பற்றிப் பேசுவதற்கு ஆள் எங்கே?

நானாக இருக்கிறதனாலே கொஞ்சம் சும்மா இருக்கிறான். இன்னொருவன் பேச ஆரம்பித்தால் ஒழித்துப் போடுவான்"


- என்று பெரியார் கண்ணீர் விட்டார்.

18 May 2006

இட ஒதுக்கீடும், 'ரவி ஸ்ரீநிவாஸின்' கட்டுடைப்பும்

இத்தனை நாள்வரை மிகக் குறைந்த படசம் 'பரந்த நோக்கும் சமூகப் பார்வையும்' உள்ளவர் ரவி ஸ்ரீநிவாஸ் - என்கிற ('மாயை'யை யாவது ரவியிடம் எதிர்பார்க்கலாம் என்கிற) 'ரோசா வசந்த்'தின் கூற்றைப் போலவே நானும் நம்பியிருந்தேன். இப்போது ரவியே தன்னைக் 'கட்டுடைத்து' கொள்கிறார்.

>> இந்த இட ஒதுக்கீடு என்ற சொல்லாடல் இந்த சர்ச்சையில் கொஞசமேனும் கட்டுடைக்கப்பட்டுள்ளது. இப்போதுள்ள இட ஒதுக்கீடு கொள்கை, முறை சரியல்ல என்ற புரிதல் முன்பை விட பரவலாக இருக்கிறது. ஆனால் இட ஒதுக்கீடு குறித்த மாயை இன்னும் அதிகமாக இருக்கிறது. இச்சொல்லாடல் முழுமையாகக் கட்டுடைக்கப்பட்டு இட ஒதுக்கீடு என்பது முதலில் சரியாகவும், பின்னர் மோசமான விளைவுகளை ஏற்படுத்திய தீர்வு, அதன் போதாமைகள் அதிகம், இதை சமூக நீதி என்று எண்ணி மயங்குதல் கூடாது என்பவற்றை பரவலாக எடுத்துச் செல்ல வேண்டும். >> என்றெல்லாம் பொச்சரிப்பு பொழிகிறார் ரவி!

இதை விடவும் அயோக்கியத்தனமாக மேல்சாதித்தனத்துடன் - இன்னும் சொல்லப்போனால் "பாப்பாரத்தனமாக" இந்த விஷயத்தைத் திரிக்க முடியாது.

"மெரிட்" என்கிற எச்சித்தனமான மாயையான சங்கதியை - இன்று 'காஞ்சா இலையா' போன்ற சமூக நீதி அறிஞர்கள் 'கட்டுடைத்துக்' கொண்டிருக்கும் வேளையில் - தங்களின் புரட்டுத்தனமான மேல்சாதித்தனமான 'மெரிட் வாதம்' - சமூகத் தளங்களில் அவற்றால் ஏற்பட்ட சமூகப் பங்களிப்பு என்ன என்கிற கறாரான எடைபோடப்பட்டுத் தோலுரிக்கப்படுவதைப் பொறுக்க முடியாத மனுவாதிகள் (இன்றைய சூழலில் பார்ப்பன - பனியா கூட்டணி மயிரான்கள்) - 'இட ஒதுக்கீட்டை' கட்டுடைத்துவிட்டதாக ஊளையிடலாம்.

அந்த கோஷ்டியிலே சேர்ந்து கொள்ளும் "Political Correctness" (அதாவது அவாள்களுக்கு)
இப்பொது ரவியிடம் தொற்றிக் கொண்டு விட்டது. இது குறித்து விசனப்பட வேண்டியதில்லை!

சமூக நீதி என்பது இவர்களின் "இருப்பை" கேள்விக்குள்ளாக்காமல், 'பீடத்தைப்' பெயர்க்காமல் நடக்கும் வரை அதன் நலம்விரும்பிகளாக வேடம் தரிக்க இவர்களால் நன்றாகவே இயல்கிறது.

தங்கள் சமூக அதிகாரத்தின் அடிவேராக இருக்கும் Intellectual Leadership மாயைக்கே வேட்டு வைக்கிற நடவடிக்கை என்றதும் இந்த ஜெண்டில்மேன்களுக்கு பொத்துக் கொண்டு வந்துவிடும்!

உழைக்கும் சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மக்கள் உருவாக்கிய அரசும், தேசமும் - அவர்களின்
பெருவாரியான ரத்தம், வேர்வை, கண்ணீர் - இதன் மீதாகக் கட்டப்பட்ட அரசாங்க நிதியத்தின்
மூலம் நடத்தப்படுகிற மேற்கல்வி நிறுவனங்களின் எஜமானர்களாக மட்டும் இவாள்களே
இருப்பார்களாம்! உழைக்கும் வர்க்கத்திற்கு அதனால் ஒருபயனும் இருக்காதென்கிற 'வேத விதியை' கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டுமாம்!

சென்னை ஐஐடி-யில் எப்படி மேல்வகுப்பார் - "சூத்திரர்" களை நடத்துகிறார்கள், மற்ற
ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதி பேராசிரியர்கள் அவமானப்படுத்தப்படுகிறார்கள் என்பதற்குச் சான்றாக பேராசிரியை வசந்தா கந்தசாமியின் உதாரணத்தை ரவியின் முந்தைய இட ஒதுக்கீட்டுப் பதிவில்
சொல்லியிருந்தேன். அதற்கு - ஒரே ஒரு உதாரணம் போதாது என்று புறந்தள்ளிப் பேசிவிட்டார். உண்மையில் வசந்தாவின் இ-மெயிலுக்கு ஒரு மடல் அனுப்பி முயற்சி செய்துவிட்டுப் பிறகு ஐஐடி-யின் மேல்சாதித் திமிர்த்தனம் பற்றி இவர் புரிந்து கொள்ளவாவது முயற்சி செய்திருக்கலாம்!

உயர்கல்வி நிறுவனங்கள் 'பெரியார் பூமி'யிலேயே இப்படி நடக்கும் என்றால் வட இந்தியாவில்?!!!

இவர்கள் மற்ற பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை நாய்களாகவும், புழுக்களாகவும் நடத்துவார்களாம்; ஆனால், இந்தியாவில் இவர்களின் மேலாதிக்கத்தை மட்டும் சாமரம் வீசி பாதுகாக்க வேண்டுமாம்!

அடச்சீ! இப்படிப் பேசுவதற்கு இவர்களுக்கெல்லாம் வெட்கமாய் இல்லை?

சிங்கப்பூரிலும் - கொரியாவிலும் ஐஐஎம் கிளைகளை அமைத்தே தீரவேண்டும் - அங்கெல்லாம் நம்முடைய பேராசிரியர்கள் பாடம் நடத்தி பன்னாட்டு வணிக அறிவுசால் வல்லமை பெறவேன்ண்டும் என்றெல்லாம் - இந்த மேலாதிக்க எஜமானர்கள் கொஞ்சம் நாள் முன்பு கூட பரப்புரை செய்து கொண்டிருந்தார்கள். ஏனெனில், ஐஐஎம் என்பது ஒரு சிறப்பான Brand-ஆம்; அதை உலகம் முழுக்கப் பரப்புவார்களாம்!

அதற்கான அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்கியதே - குப்பனும், சுப்பனும் வரி கட்டி - வாக்களித்து உருவாக்கிய அரசாங்கமும், அரசும் தானே - அவர்களுக்கு இந்த 'மேட்டுக் குடி' நிறுவனங்கள் என்ன செய்து கிழித்து விட்டன?

>> இந்த இட ஒதுக்கீடு சர்ச்சை நமக்கு உணர்த்து என்னவென்றால் அரசுக்கும், அனைத்து
கட்சிகளுக்கும் வாக்கு வங்கிகள், ஜாதி அரசியலுக்கு அப்பாற்பட்டு சிந்திக்க தெரியாது. இட
ஒதுக்கீடு என்ற பெயரிலும், சமூக நீதி என்ற பெயரிலும் கல்வித்துறையில், உயர்கல்வியில் உள்ள பிரச்சினைகளை மூடி மறைக்கப் பார்க்கிறார்கள். >> - என்கிறார் ரவி..

கொஞ்சம் நாள் முன்பு பார்ப்பனர்களும், தலித்துகளும் சேர்ந்து சமூக தளத்தில் செயல்பட
வேண்டும் - பிற்பட்ட வகுப்பாரை எதிர்த்து; ஏனெனில் அதுவே இப்போதைய இயற்கையான
சூழ்நிலை - என்றெல்லாம் நயவஞ்சகப் பரப்புரை செய்து கொண்டிருந்தார் ரவி. அதைக் கூட ஒரு அரசியல் கருத்து என்று அப்போது நம்பிக் கொண்டிருந்தார்கள் சிலர்; ஆனால், இப்போது இவர் பேசுவது முழுக்க முழுக்க பார்ப்பனிய, உயர்சாதிய சிந்தனையின் பாற் பட்ட அரசியலே.

அதனால்தான், சமூக நீதி என்கிற உயரிய கருத்தாக்கத்தையும் 'கட்டுடைக்க' துணிச்சலோடு
வந்திருக்கிறார்.

மருத்துவர் ராமதாஸ் அவர்களின் அரசியலே மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி - வேலை வாய்ப்புக்கான சமூக நீதி இட ஒதுக்கீடு குறித்துத்தான் எழுந்தது. அதத்தான் அவர் இப்போதும் பேசுகிறார்; செயல்படுகிறார் - அதை ரவி 'பிற்பட்ட ஜாதிகளின் காவலனாக

காட்டிக் கொள்ள அவர் செய்யும் முயற்சி' என்று சேறு வாரி இறைப்பது - அயோக்கியத்தனமான பேச்சாகவே தோன்றுகிறது.

கலைஞரும் இதைப்போல கருத்தைத்தான் நேற்று - திருவாரூரில் பேசியுள்ளார்; கலைஞருக்கும் 'ரேசிஸ்ட்' முத்திரையை (இரண்டாம் முறையாக) குத்துவதற்கு ரவிக்கு ஒரு வாய்ப்பு எனக் கருதிக் கொள்ளலாம் போல!

'தி ஹிந்துவிலே' வியாழன் அன்று (18/5/06) வெளிவந்திருக்கும் "OBC Quota: stirring wider issues" என்கிற கட்டுரையைப் பற்றி "இந்த விமர்சனம் முட்டாள்த்தனமாக உள்ளது" என்கிறார் ரவி.

OBC மக்கள் தங்களுக்கு 27% தரப்படும் வரை - எந்த மேல்சாதிக்காரனும் படிக்கவோ, வேலை செய்யவோ கூடாது என்றொரு கடும் போராட்டத்தை முன்னெடுக்கத்தான் ரவி போன்றவர்களின் எதேச்சதிகாரக் கருத்துக்கள் தூண்டும்.

>> எனவே நாடு தழுவிய ஒரு விவாதம் ஏற்பட்டு, பல்வேறு தரப்பினர் கருத்தினை ஆய்ந்த பின் கருத்தொற்றுமை ஏற்பட வழி செய்வோம் என்று அரசு முடிவு செய்திருக்கலாமே. அரசு தன் முடிவினை ஒரு தலைபட்சமாக திணிக்க முயன்றது. இதற்கு எதற்கு மாணவர்களை குறை சொல்ல வேண்டும். >> - என்று மேலும் மேலும் தன்னையே முரண்படுத்திக் கொள்கிறார்.

நாடு தழுவிய விவாதம் செய்ய எங்கே விட்டர்கள் மேல்சாதி ஜெண்டில்மேன்கள்?

"தேர்தல் முடிவு வரட்டும்; பிறகு பேசுவோம் - ஏனெனில் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது" என்று அர்ஜுன் சிங் சொன்னபிறகும் - இஷ்டத்துக்கு நினைத்த போது போராட்டம், வேலை நிறுத்தம், பிரதமர் வீடு நோக்கிப் படையெடுப்பு - என்கிற காட்டுமிராண்டித்தனமான அராஜகத்தைச் செய்தது யார்? ரவி பாதுக்காக்கும் அதே மேல்சாதி மாணவர்கள்... டாக்டர்கள்தாம்!

தமிழக அரசு ஊழியர் போராட்டம் அவர்களுடைய வாழ்வுரிமை பற்றியது; அதுவும் அரசு ஊழியர் தெளிவாக கோரிக்கைகள், அறிக்கைகள், தர்ணாக்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்ட்ங்கள், பேச்சுவார்த்தைக்கான முறையீடுகள் - என எல்லா சனநாயக் முறைகளையும் செய்து பிறகு ஸ்டிரைக் பற்றிய முன்னறிவிப்பு கொடுத்து - பிறகுதான் வேலை நிறுத்தம் செய்தார்கள். (அப்போதும் கூட டாக்டர்கள், நர்சுகள் அந்த அரசு ஊழியர் போராட்டத்தில் கலந்து கொள்ள நிர்ப்பந்திக்கப்படவில்லை என்பது முக்கியமாக கவனிக்கப் படவேண்டியது).

அந்தப் போராட்டத்துடன் - இப்போதைய மேல்சாதி டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள் டில்லியில் Unannounced Flash Strike நடத்தும் திமிர்த்தனத்தோடு ஒப்பிடுகிறார் ரவி. இவருடைய நேர்மை இத்தனை கீழ்த்தரமாக எழுதுமளவு இறங்கும் என்று இதுவரை நான் கருதியதில்லை.

ரவி ஸ்ரீநிவாஸ் கட்டுடைக்கப்பட்டிருக்கிறார்; அதையும் மற்றவருக்கு விட்டு வைக்காமல் அவரே செய்து கொண்டிருக்கிறார். அதற்கு அவருக்கு நன்றி.

15 May 2006

கணக்குப் புலிகள்!

தி.மு.க-வின் வெற்றியைப் பொறுக்க முடியாத 'பரம்பரைப் பகை' தொடர்ந்து விஷம் கக்கி வருவது தெரிந்ததே! நம் பகைவருக்கு கணக்குச் சொல்லித் தரும் தேர்தல் அலசல் இதோ!

(சும்மா இருக்கலாம்னு பாத்தாலும் 'பகை' விடமாட்டேங்கிதேப்பா! ;) )

06 May 2006

சிந்து சமவெளி திராவிட நாகரிகம் - வரலாற்று மீட்டெடுப்பு!

மயிலாடுதுறையில் கிடைத்த கல்வெட்டு குறித்த செய்தியை மே 1 -இலேயே ஹிந்துவில் படித்திருந்தாலும், அப்போது வலைப்பதிய இயலவில்லை. இருந்தாலும் - அது குறித்த மேலதிக தகவல்களை தொடர்ந்து தேடிக் கொண்டிருக்கிறேன்.

ஒரு நூற்றாண்டு காலத்தின் மிக மிக முக்கியமான கண்டுபிடிப்பு என தொல்லியல் அறிஞர்கள் இந்த அரிய கண்டுபிடிப்பைப் பற்றிச் சொல்கிறார்கள்.

இது பற்றி ஏற்கெனவே செய்தி.நெட் -இல் எழுதப்பட்டாகிவிட்டது.

முத்து (தமிழினி)யும் பதிவு செய்திருக்கிறார்.

தொல்லியல்/இந்தியவியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் முதலான தொல்லியலாளர்கள் இது குறித்து ஆராய்ந்து, இக்கல்வெட்டின் காலம் ஏறக்குறைய கி.மு. 2000 முதல் கி.மு 1000 -க்குள் எனக் கருதுகிறார்கள்.

சற்றேறக்குறைய கி.மு. 1500 வாக்கில் இக்கல்வெட்டில் காணப்படும் சிந்து சமவெளி எழுத்து வடிவங்கள் வடிக்கப்பட்டிருக்கக் கூடும் என முதனிலை ஆய்வு கூறுவதாகத் தெரிகிறது.

தென்னகத்தில், கி.மு. 1500 வாக்கில் சிந்துசமவெளி எழுத்துக்கள் இருந்தது நிரூபிக்கப்பட்டிருப்பது மாபெரும் நிகழ்வு ஆகும். இவ்வெழுத்துக்கள் திராவிட மொழி வகையினதாக இருப்பதும், அதன் மூலம் சிந்து சமவெளி திராவிட நாகரிகமானது என்பதும், தென்னகமும்-சிந்து சமவெளியும் உறவு பூண்டிருந்ததும் - பல வருடங்களாக திராவிட வரலாற்றாசிரியர்கள் தெரிவித்து வந்திருக்கும் கருதுகோள்களை நிறுவப் பெரிதும் பயன்படும்!

இக்கல்வெட்டு தமிழகத்தின் தொன்மையான காலத்திய படைப்புத்தான் என்றும், ஹரப்பா போன்ற சிந்துவெளி நகரங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட கல்வெட்டு அன்று என்றும் ஆணித்தரமாகச் சொல்கிறார் ஐராவதம் மகாதேவன். இதன் மூலம், பண்டைய சிந்துவெளி - தமிழக திராவிட நாகரீகங்களின் உறவு புலப்படுகிறது.

பிந்தைய தமிழ் பிரம்மி வகைக்கும் ஆதியான வடிவமாக இக்கல்வெட்டின் எழுத்துவடிவம் விளங்குவது இதன் தொன்மையையும், சிந்துவெளியின் திராவிட இயல்பையும் நன்கு எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

என்னுடைய முந்திய பதிவுகளில் ஒன்றான ஆதிச்சநல்லூர் - பொருநைவெளி நாகரிகம் பதிவில் கூறப்பட்டிருக்கும் கருதுகோள்களை மேலும் வலுச்சேர்க்கும் விதமாக இப்போதைய கல்வெட்டு கண்டுபிடிப்பு அமைந்துள்ளது!

இதன் வரலாற்று முக்கியத்துவம் நம்மவருக்கே இன்னும் சரியாக விளங்கவில்லை! வந்தேறிகளும், அவர்தம் வழிவந்தாரும் இக்கண்டுபிடிப்பின் உண்மையையும், முக்கியத்துவத்தையும் குறைத்துச் சொல்வதில் ஒன்றும் வியப்பு இல்லை! :)

'குதிரை விளையாட்டாளர்' என்.எஸ். ராஜாராம் என்கிற இந்துத்துவ வெறியர் ஹிந்துவுக்கு இது குறித்து எழுதிய கடிதத்தில் - இம்மாதிரியான சிந்துவெளி எழுத்துக்கள் பாரசீகத்திலும் (இப்போதைய ஈரான், ஈராக் பகுதிகள்) கிடைத்துள்ளன என்று கம்பு சுத்தியிருக்கிறார்!

ஆனால், அவர் சொல்வது சிந்துவெளி வணிகர்கள் பண்டைய Elamite, Mesopotomian நாகரீகங்களுடன் வைத்திருந்த வணிக உறவின் மூலமாக சிந்துவெளியிலிருந்து அங்கு கொண்டு செல்லப்பட்ட ஓடுகள், கல்வெட்டுப் பொருட்கள் முதலானவை.

ஆனால், இப்போது மயிலாடுதுறையில் கிடைத்திருப்பது - இங்கேயே தமிழகத்திலேயே சிந்துவெளி எழுத்துக்களால் (திராவிட மொழி வகையினம் என்று தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்ற) பொறிக்கப்பட்ட கல்வெட்டு!

இது இனி நிகழப்போகும் மாபெரும் வரலாற்றின் மீட்டெடுப்புக்கான முதல் துளி என்று சிலாகிப்பதற்கு நிறையவே காரணமிருக்கின்றது.

என்னுடைய ஆதிச்சநல்லூர் பதிவில் நான் இட்ட (ஆங்கிலப்) பின்னூட்டம் ஒன்றில் குறிப்பிட்டிருக்கும் செய்தியைப் படித்தால் - இந்தக் கல்வெட்டின் முக்கியத்துவம் மேலும் விளங்கும்! ;)

ஒவ்வொன்றாக 'வரலாற்றின் உண்மைகள்' தெளிய ஆரம்பித்திருப்பது தமிழருக்கு/திராவிட இன ஆய்வாளருக்கு மகிழ்ச்சியான செய்தியே!

Dravidians shall keep their 'Tryst with Destiny'!

( இது குறித்து மேலும் கிடைக்கக் கூடிய புதிய தகவல்களை இங்கேயே சேர்க்க நினைத்துள்ளேன்)



பி.கு:

கலைஞர் 4/5/2006 அன்று இந்தக் கல்வெட்டு குறித்த செய்தியை தீவுத்திடல் கூட்டத்தில் பிரதமர் முன்பாகப் பேசிய பேச்சில் குறிப்பிட்டு பெருமிதமாகச் சொன்னார்! :)

27 April 2006

'அவாள்'களுக்கு 'டாட்டா' காட்டுகிறார் தயாநிதி மாறன்!

சும்மாவே 'இவாள்'களுக்கு திமுக என்றால் எட்டிக்காய்; இப்போது ஜெ. மாமியின் தமிழக (கொடுங்)'கோல்' ஆட்சியைத் தக்க வைக்க முடியாமற் போய் விடுமோ என்கிற பயமும் சேர்ந்து கொண்ட பின்னர் கேட்கவா வேண்டும்?!

தயாநிதி மாறன் 'டாட்டா குழுமத்தை' DTH விசயத்தில் மிரட்டினார் என்று 'சும்மா' கொளுத்திப் போட்டு - அதற்குத் தங்கள் ஆஸ்தான குரு சோ -வின் ஆதிசேட நாக்கை வேறு பயன்படுத்திப் பார்த்தார்கள்!

'குரு கோல்வால்கருக்கு' அஞ்சலி செலுத்தும் தமிழகத்தின் 'ஒரே நடுநிலைப் பத்திரிக்கை'யான தினமணியில் கம்பு சுத்திப் பாத்தாச்சு! அவங்கப்பன் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிலும் அலம்பல்கள்! போதாததற்கு 40 கோடி (150 கோடி??!) புகழ் கோமாளியும் ஊளைக்கு ஒத்து வேறு!

என்னடா விசயமென்றால் - 'அதாவதுங்கய்யா சம்பவம் நடந்த எடத்துல இருந்து நான் திரும்பி வர்றப்ப ஒரு பத்துமைல் தூரத்தில தயாநிதி மாறன் வீடு இருந்துச்சுங்கய்யா' ரேச்ஞ்சில முழநீள பதிவுகள்!!! ;) (எல்லாம் இடஒதுக்கீடு அறிவிப்புப் படுத்தும் பாடு!! - என்னப்பா தமிழ்நாட்டில ஒரு டாக்டரும் தெருவில போராடக்காணமே! ;) )


தயாநிதி மாறன் - தன்னைப் பற்றிய பற்றிய செய்தி அவதூறு என்றும் - அதை வெளியிட்டதற்காக - 'தினமணி' ஆசிரியரும், 'தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்' நிர்வாக இயக்குநரும் - தன்னிடம் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் - தவறினால் ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடரப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

தினகரனில் இன்று(27/04/06) வெளிவந்திருக்கும் அந்தச் செய்தி இங்கே :

"டாடாவை மிரட்டினார் தயாநிதி மாறன்" என்ற பெயரில் தினமணியிலும், எக்ஸ்பிரஸ் இன்வெஸ்டிகேஷன் என்ற பாணியில் தி இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிலும் 26.4.2006 அன்று வெளியான கட்டுரை விஷமத்தனமாக உள்ளது. இந்தக் கட்டுரையில் வெளியான தகவல்கள் கற்பனையானவை, பொய்யானவை, அற்பத்தனமானவை.

உங்கள் செய்தியில் வெளியாகியுள்ள தகவல்கள் நிரூபிக்கப்படவில்லை. சந்தேகங்களையும், ஐயப்பாடுகளையும் எழுப்பிவிட்டு அவற்றுக்கு பாதிக்கப்பட்டோரே பதில் சொல்ல வேண்டும் என்று கூறுவதை ஏற்க முடியாது.

தயாநிதி மாறனைப் பிடிக்காத சிலரின் கட்டளைப்படி நேர்மையற்ற முறையில் புரளிகளைப் பரப்பி ஆதாயம் அடைவதற்காக இந்தக் கட்டுரையை வெளியிட்டு உள்ளீர்கள். அவர் பதில் அளிக்க மறுக்கும் விஷயங்களை தயாநிதி மாறன் மறுக்க வேண்டும் என்கிறீர்கள்.

இதுகுறித்து பிரஸ் கவுன்சிலிடம் தயாநிதி மாறன் புகார் செய்வார். தேர்தல் சமயத்தில் இது போன்ற அவதூறான கட்டுரையால் அவர் சார்ந்துள்ள கட்சிக்குப் பாதிப்பு ஏற்படலாம்.

உங்கள் கட்டுரையில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு விஷயத்தையும் தயாநிதி மாறன் மறுக்கிறார்.
மேலும் சன் டி.வி சம்பத்தப்பட்ட எந்த விஷயத்திலும் தனக்கு ஆர்வமில்லை. தனது பெயரை இந்த விஷயத்தில் தேவையின்றி இழுத்து சேற்றை வாரி இறைப்பதாகக் கூறுகிறார்.

எனவே எனது கட்சிக்காரரிடம் (தயாநிதி மாறன்) நீங்கள்: நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும். அத உங்கள் பத்திரிக்கையில் பிரதான இடத்தில் வெளியிட்டுக் களங்கம் கற்பித்ததற்கு நஷ்ட ஏடாக ரூ. 1 கோடி தரவேண்டும்.

இதைச் செய்யத் தவறினால் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும். அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நீங்கள் பொறுப்பு ஏற்க வேண்டியது இருக்கும்."


கார்த்திக்கும் அவரது பார்வர்டு பிளாக் கட்சிக்காரர்களும் தொடர்ந்து மிரட்டப்படுவது - ஒரு வேட்பாளர் தற்கொலைக்குத் தூண்டப்பட்டது, எம்ஜியாரின் அண்ணன் மகள் லீலாவதி மிரட்டி துன்புறுத்தி ஆண்டிப்பட்டியில் வேட்புமனு தாக்கல் செய்வதிலிருந்து தடுக்கப்பட்டது, தேமுதிக வேட்பாளர்கள் விலைபேசப்படுவது - என தொடரும் 'அவாள்' திமுக-வின் லீலைகளில் இந்த அவதூறு செய்தியும் ஒன்றாகிறது போலும்!

வழக்கம்போல - 'இவாள்' இதையும் இருட்டடிப்புச் செய்வாள் பாருங்கோ! ;)

23 April 2006

பொடாவுக்காக ஜெ. மன்னிப்புக் கேட்டாரா? - சுபவீயின் செவ்வி


'இந்துத்துவத்தின் இன்னொரு முகம்' ஜெயலலிதா என்று அடித்துச் சொல்லுகிறார் பேராசிரியர் சுபவீ அவர்கள் - தினகரனில் இன்று(22/4/06) வந்துள்ள செவ்வியில்; செவ்வியின் சுட்டி


ஒரு கூடுதல் செய்தி :

சுபவீ திமுக அணியை ஆதரித்து தேர்தல் பிரசாரச் சுற்றுப்பயணம் செய்யப் போகிறார்; அதன் விவரம் இங்கே படிக்கவும்

:)

22 April 2006

எலிசபெத்தின் காதல்!

சில வருடங்கட்கு முன்பு எலிசபெத் பாரெட் ப்ரவுனிங்(Elizabeth Barrett Browning) என்கிற பிரபலமான ஆங்கிலப் பெண் கவிதாயினியின் 'சானட்ஸ் ஃபிரம் த போர்ச்சுகீஸ்' (Sonnets from the Portuguese) என்கிற தொகுப்பைப் படிக்க நேர்ந்தது.

விக்டோரியன் காலகட்டத்தில் வாழ்ந்த மாபெரும் பெண் கவிஞராக எலிசபெத் மதிக்கப்படுகிறார். அவரை விடவும் வயதில் இளையவரான ராபர்ட் ப்ரவுனிங் (Robert Browning) என்கிற இன்னொரு பிரபலமான கவிஞரை காதலித்து மணந்தவர் எலிசபெத்.

'சானட்ஸ் ஃபிரம் த போர்ச்சுகீஸ்' என்கிற கவிதைத் தொகுப்பே எலிசபெத் தன் ஆருயிர்க் காதலனை எண்ணி உருகி உருகிப் பாடியதுதான்! படிப்பவர்களையும் உருக வைப்பது; உயிர்ப்புள்ள கவிதைகள் அவை.

அந்தத் தொகுப்பின் 43-ஆம் பாடலை தமிழில் மொழி ஆக்கம் செய்து பார்க்கும் ஆசை வந்தது! இதைச் செய்தும் இப்போது சில காலங்கள் ஆகின்றன; அந்த மொழி ஆக்கக் கவிதையை (முயற்சியை) இங்கே தருகிறேன்.

எலிசபெத்தின் 'மொழியாளுமை' எளிய சொற்களின் மூலம் வலிய வளமான படிமங்களைக் உருவாக்க வல்லது. புலனறிவு கடந்த இறைமைத் தேடலின் 'ஆன்மா' இக்கவிதைகளில் 'சூல்' கொண்டுள்ளது என்பர். நான் மொழியாக்கத்திற்கு நமது புதுக்கவிதை வடிவத்தை முயன்று பார்த்திருக்கிறேன். இனி மொழியாக்கக் கவிதை :


'சானட்ஸ் ஃபிரம் த போர்ச்சுகீஸ்' - 43


உன் மீதான என் காதலை எப்படி விரித்துரைப்பேன்?
என் காதலென்னும் வேகப்புரவி...
உணர்வென்னும் சமவெளியில் புரண்டு சிலிர்க்காமல்
மொழியென்னும் தொழுவத்தில் அடைபடச் சம்மதிக்குமா?!

விம்மிப் புடைத்து நிற்கும் என் ஆன்மாவின் ஒவ்வொரு அணுக்களிலும்
எல்லையற்ற உன் நினைவுகள் வியாபித்திருக்கின்றன...
பகலும் இரவும் காதலால் என்னை ஒளியூட்டும் உன் பெயரென்னும் விண்மீன்!

கட்டற்ற காற்றாய் என் காதல் வந்துன் சுவாசமாகட்டும்
புனிதமான என் நேசம் கார்மேகமாய் சூல் கொண்டு
உன்னைக்கண்டதும் மழைக்கத்தொடங்குகின்றன
என் பழைய காயங்கள் உனைக் கண்டதும் இமை மூடுகின்றன

உன் மீதான காதல்
இழந்துபோன என் பழைய புதையல்களை மீட்டெடுத்துவிட்டது!
இறந்துபோன நம்பிக்கைகளுக்கும் 'மீட்சி' தந்தது!

என் மூச்சின் காற்றாய் நீ!
என் புன்னகையின் ஆன்மாவாய் நீ!
என் கண்ணீரின் ஜீவ ஊற்றாய் நீ!
என் வாழ்க்கையின் மூல வேராய் நீ.. நீதான் இருக்கின்றாய்!
என் 'மெய்' - 'பொய்'யாகிப் போன பின்னும்
பிரபஞ்சத்தின் கைகளால் உனைத் தழுவிகொள்வேன் -
இன்னும் இறுக்கமாய்!


********************************


பின்வருவது எலசபெத்தின் மூலக் கவிதை:

Sonnets from the Portuguese: 43

How do I love thee? Let me count the ways.
I love thee to the depth and breadth and height
My soul can reach, when feeling out of sight
For the ends of Being and ideal Grace.
I love thee to the level of every day's
Most quiet need, by sun and candlelight.
I love thee freely, as men strive for Right;
I love thee purely, as they turn from Praise.
I love thee with the passion put to use
In my old griefs, and with my childhood's faith.
I love thee with a love I seemed to lose
With my lost saints, -- I love thee with the breath,
Smiles, tears, of all my life! -- and, if God choose,
I shall but love thee better after death.

- Elizabeth Barrett Browning

21 April 2006

கலைஞரால்தான் பொடா சிறையிலிருந்து வெளியே வந்தோம் - சுபவீ

வில்லிவாக்கத்தின் திமுக வேட்பாளரை ஆதரித்து அம்பத்தூரில் நடந்த பொதுக்கூட்ட்டத்தில் பேராசிரியர் 'அடலேறு' சுபவீ அவர்கள் பேசியிருக்கிறார் :

* கலைஞரின் முயற்சியால்தான் - நானும், வைகோவும் மற்ற பொடாவில் கைது செய்யப்பட்டவர்களும் சிறையிலிருந்து வெளியே வந்தோம்

* வைகோ சிறையிலிருந்த போது எழுதிய நூல்கள் சிறப்பானவை;ஆனால் இப்போது அதற்கு நேர் எதிராக அவர் செயல்பாடுகள் உள்ளது. எனவே வைகோவின் நூல்களைக் கொளுத்தவேண்டும்.

* ஜெ. தமிழின அடையாளங்களுக்கு எதிரானவர்; அவரை விமர்சிப்பவர்களைக் கொலை கூடச் செய்து விடுவார்.

* தமிழகத்தில் சனநாயகம், தமிழின உணர்வு ஆகியவை தழைத்தோங்க திமுக கூட்டணிக்கே தமிழக மக்கள் வாக்களிக்க வேண்டும்.

கூட்டத்தில் கவிஞர் அறிவுமதி, இயக்குநர் சீமான் - ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கமல்ஹாசனுக்கு அதிமுக மிரட்டல்?

நேற்று கலைஞர் தூத்துக்குடியில் பேட்டியளிக்கும்போது, ஒரு பிரபல நடிகருக்கு அதிமுக 100 கோடி ரூபாய் தருவதாகவும், அதை வாங்கிக் கொண்டு அதிமுக-வுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்யும்படியும் வியாபார பேரம் போல் பேசியதாகவும் - ஆனால் அந்த நடிகர் அதை ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

அந்த நடிகர் யார் என்பதை பத்திரிக்கையாளர்களிடம் தெரிவிக்கவில்லை கலைஞர்.

இன்றைய ((ஏப்.21) தினகரனில் - அது கமல்ஹாசன்தான் என்றும், அவர் 100 கோடி ரூபாய் வாங்கிக் கொள்ளவோ, மருதநாயகத்துக்கு பண உதவி - இன்னபிற உதவிகளை செய்வதாக அதிமுக சார்பில் பேசிய (சசிகலா) நடராஜனின் பேரத்தை அடியோடு மறுத்து விட்டதாகவும் - செய்தி வெளியிட்டு உள்ளார்கள்.

தொடர்ந்து கமல் மறுத்ததால் அழுத்தமாக மிரட்டல் தொனியில் வற்புறுத்தல்கள் வந்திருக்கின்றன. இதனால் கமல் 20 ஆம் தேதி இரவே அமேரிக்கா சென்றுவிட்டார் என்றும் செய்தி வந்துள்ளது.

கமலையே 'விலைக்கு வாங்க' நடந்திருக்கும் இந்த காட்டுமிராண்டிகளின் முயற்சி அம்பலத்துக்கு வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் செய்தி உண்மையானால்
...... 'டாக்டர் கோவூர்' விருது பெற்ற பகுத்தறிவாளர் கமல் - இது போன்ற குதிரை வியாபாரங்களுக்கு விலைபோக மாட்டார் என்று நான் நம்புகிறேன். இப்படி விலை போய்த்தான் 'மருதநாயகம்' எடுக்க வேண்டுமென்றால் அந்தப் படமே தேவையில்லை.

மேலும் நம்முடைய நாராயணன(உருப்படாதது) அவர்கள் முன்பு எழுதியது போல - வெளிநாட்டு பட நிறுவனங்கள் மூலம் நிதி திரட்டியாவது அவர் அந்த உன்னதப் படைப்பைச் செய்யட்டும். இந்த தமிழின விரோதிகளிடம் அவர் தன் பெருமையை இழக்காதிருக்கட்டும்.

இம்மாதிரியாகக் கேவலமாக அவரை விலை பேசிய கும்பலுக்கு தேர்தலுக்குப் பின் உரிய விளைவுகளைச் சந்திக்கிற நிலை வரத்தான் போகிறது.

19 April 2006

பச்சரிசிகளும், 'புழுத்த' அரிசிகளும்!

கடந்த இரண்டு வாரங்களாக தி.மு.கவின் தேர்தல் அறிக்கையிலே தெரிவித்திருந்த, தொடர்ந்து கலைஞர் வாக்குறுதி அளித்து பிரச்சாரம் செய்த 'ஒரு கிலோ இரண்டு ரூபாய்' பொது விநியோக அரிசித் திட்டத்துக்கு ஜெ.வும், 'வையகத்தின் கோமாளியும்' கடும் எதிர்ப்பும், கிண்டலும் செய்தபடி இருந்தனர்.

இப்போது தமிழக முதல்வர் திடீரென ஒரு 'சந்துமுனையில்' நின்றபடி 10 கிலோ அரிசி வாங்கினால் 10 கிலோ இலவசம் என்கிறார், ஒரு முதலமைச்சர் 'கொள்கை முடிவுகளை' இப்படி அறிவிக்கக் கூடாது என்கிற வரம்பையும் மீறி!

அதற்கும் சில அறுந்த வால் வானரங்கள் தாண்டிக் குதித்து குட்டிக்கரணம் இட்டு மகிழ்ச்சி ஊளையில் திளைக்கின்றன! இத்தனை சனநாயக விரோதப் போக்கும் தமிழின விரோதக் கும்பலால் நடத்தப் படுகின்றன.

இதிலே முழு உண்மை என்ன? என்று தெரிந்து கொள்ள விரும்புவோர்க்கு :


1. மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் தெளிவான விளக்கம்


2. மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் தெளிவான கூடுதல் விளக்கம்(தினமணி)


3. கலைஞரின் கருத்து


4. கலைஞரின் கவிதை



5. அரசியல் தலைவர்கள் கருத்து

17 April 2006

'பரம்பரைப் பகையை' எதிர்கொள்ள இனமான வீரர்கள் அணிவகுப்பு!

'பரம்பரைப் பகை' என செயலலிதா வெளிப்படையாகவே அறிவித்திருப்பதை தமிழினத்துக்கு விடப்பட்ட அறைகூவலாகவே இன உணர்வாளர்கள் கருதுகின்றனர் என்பது உறுதி. திராவிடர் கழகத் தலைவர் வீரமணீ அவர்கள் 18 ஏபரல் முதல் தி.மு.க கூட்டணியை ஆதரித்து தமிழகமெங்கும் பிரச்சாரம் செய்யப் போவதாக அறிவித்திருக்கிறார்.

1990-களில் 'தடாவில் கைதாகி சிறைவாசம் செய்தவரும், பிறகு 2002-ஆம் ஆண்டு 'பொடா'வில் கைதாகி ஒன்றரை ஆண்டு காலம் வெஞ்சிறையில் இன உணர்வுக்காகவும், ஈழ விடுதலை உணர்வுக்காகவும் வாடிய - பேராசிரியர் 'அடலேறு' சுப.வீரபாண்டியன் அவர்களும் - தமிழின விரோத செயலலிதாவை தமிழக அரசியல் அரங்கிலிருந்தே வெளியேற்றுவோம் என்கிற முழக்கத்தோடு களத்தில் குதித்திருக்கிறார்.

இரண்டு நாட்களுக்கு முன் சுபவீ வெளியிட்டுள்ள அறிக்கை:

"பொடா சட்டத்தின் கீழ் ஒன்றரை ஆண்டு சிறையில் கிடந்த தமிழன் என்னும் அடிப்படையில் தமிழ் மக்களிடம் என் வேண்டுகோளை முன் வைக்கிறேன்.

பொடாவை மறந்து விட்டோம் என நண்பர்கள் சிலர் கூறுகின்றனர். அது நமக்கும் செயலலிதாவுக்கும் இடையிலான தனிப்பட்ட பகை என்றால் மறந்து விடலாம்.

தமிழினத்துக்கும், தமிழீழ உறவுக்கும் எதிராக அவரால் தொடுக்கப்பட்ட போர்ப்பிரகடனம் அல்லவா அது? - என்பதால் என்னால் மறக்க முடியவில்லை.

தமிழர் தேசிய இயக்கத்தை தடை செய்து, கண்ணகி சிலை போன்ற தமிழ் அடையாளங்களை அப்புறப்படுத்தி, தமிழ் உணர்வாளர்களை எல்லாம் பயங்கரவாதிகளாக சித்தரித்து, தமிழகத்தின் தமிழ்த் தெருவில் தமிழே இல்லாமல் பார்த்துக் கொண்ட தமிழ் இன எதிரி செயலலிதாவின் கொடுங்கோல் ஆட்சி இனியும் இந்த நாட்டில் நீடிக்கக் கூடாது.

'பரம்பரை எதிரியோடு தேர்தலில் மோதுகிறேன்' என்று செயலலிதாவே சொன்னபிறகு, அந்த அறைகூவலை நாமும் ஏற்போம். பரம்பரை எதிரியைத் தேர்தல் களத்தில் எதிர்கொள்வோம்.

சர்வாதிகார ஆட்சி ஒழியவும், சனநாயக ஆட்சி மலரவும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தி.மு.க கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய உள்ளேன்.

தமிழ் இன உணர்வாளர்களே - நீங்களும் களத்துக்கு வாருங்கள். கைகோர்த்து நிற்போம். "

இவ்வாறு தெரிவித்திருக்கிறார் சுபவீ.

சனவரித் திங்களில் ஒரு சாலை விபத்தின் காரணமாக காயமடைந்து இப்போதுதான் தேறி வந்திருக்கும் சுபவீ அவர்களின் இன உணர்வுப் போராட்டம் வாழ்த்துக்கும் வணக்கத்துக்கும் உரியது.

'பரம்பரைப் பகையை' வேரறுக்க இன உணர்வுப் போர் வீரர்களும், படைத்தலைவர்களும் அணிவகுப்பது தமிழினத்தின் விடியலைக் கட்டியங்கூறும்; நாளை வெற்றி முரசம் ஒலிக்குமென்கிற நம்பிக்கை தரும் மகிழ்ச்சிச் செய்தி.

28 March 2006

துரோகிகளுக்கு 'சுபவீ ' தரும் சாட்டையடி

விடுதலைப்புலிகளையும், ஈழ விடுதலையையும் தொடர்ந்து ஆதரித்துச் செயல்பட்டதற்காக "தடா" மற்றும் "பொடா" வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறை சென்ற மாவீரர் 'அடலேறு' சுபவீரபாண்டியன் அவர்களின் கட்டுரையை இங்கே கண்டேன். அதை மறுபதிவு செய்கிறேன்.

---------------------------------------------------------------------------------

எட்டினால் தலையைப் பிடி, இல்லையேல் காலைப் பிடி

சுபவீ

"பாராளுமன்றம் ஒரு பன்றித் தொழுவம்.
தேர்தல் பாதை திருடர் பாதை"


என்றெல்லாம் முழங்கிக் கொண்டிருந்த பொதுவுடைமைக் கட்சிகளில் சிலவும் கூட இப்போது தங்கள் முடிவை மறு ஆய்வு செய்து கொண்டிருக்கின்றன. சி.பி.ஐ, சி.பி.எம்., தவிர கன்சன்யில் கே.என்.ராமசந்திரன் ஆகியோர் தலைமையில் இயங்கும் சி.பி.ஐ (எம்.எல்) கட்சி, சி.பி.ஐ. (எம்.எல்லிபரேஷன்) கட்சி ஆகியவையும் கடந்த சில ஆண்டுகளாகத் தேர்தலில் பங்கேற்று வருவதை நாம் அறிவோம்.

மிக அண்மையில் நேபாள மன்னருக்கு எதிராகக் கடும் புரட்சிகரப் போராட்டங்களை நடத்தி வருகிற நேபாள மாவோயிஸ்ட் கட்சியும் வரும் தேர்தலில் பங்கேற்க முடிவெடுத்திருக்கிறது. அதே வேளையில், மக்கள் யுத்தக்குழு, எம்.சி.சி இணைந்த புதிய கட்சி, போல்ஷ்விக்குகள், எஸ்.ஓ.சி. முதலான பொதுவுடைமை இயக்கங்கள் சில, இன்று வரையில் தேர்தல் புறக்கணிப்பையே முன் மொழிகின்றன.

பீகார் சிறை தகர்ப்பு போன்ற நிகழ்வை நடத்திக் காட்டியிருக்கிற மக்கள் யுத்தக்குழு எம்.சி.சி. ஆகியவை தேர்தல் புறக்கணிப்பு நிலையை முன்னெடுத்திருப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், புரட்சிகரப் படையோ அதற்கான திட்டங்களோ எதுவும் இல்லாமல் தேர்தலையும் புறக்கணிப்பது சரியான நிலைப்பாடுதானா என்ற கேள்வி என் போன்றோருக்குள் எழத் தொடங்கியிருக்கிறது.

மிகப் பெரிய புரட்சிப் படையைக் கட்டியிருந்த சோவியத் நாட்டில், 1917ஆம் ஆண்டு புரட்சிக்கு சில வாரங்கள் முன்பு நடந்த தேர்தலில் கூட நாங்கள் பங்கேற்றோம் என்று லெனின் குறிப்பிடுகின்றார். அதனால் புரட்சி எந்த விதத்திலும் தள்ளிப் போய் விடவில்லை என்பதை நாம் அறிகின்றோம். அது ஒரு புறமிருக்க, புரட்சிகர மாற்றத்திற்கான திட்டமும், படை அணியும் இல்லாத சூழலில், நாம் தேர்தலில் பங்கேற்பதுதான் பொருளுடையது என்று தோன்றுகிறது. தேர்தல் களத்தில் நிற்கும் இரண்டு கூட்டணிகளுக்கும் மாற்றாக புதிய ஒரு கட்சியை அல்லது கூட்டணியை உருவாக்குகிற வலிமை நமக்கு வரும் வரையில் இருக்கிற கூட்டணிகளுக்குள் எந்த ஒன்றை ஆதரிப்பது என்கிற நிலை நமக்கு ஏற்படுகின்றது.

இரண்டும் ஒன்றுதான். எரிகின்ற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி என்று கேட்பது புரட்சிகரமான தொடரைப் போலத் தென்பட்டாலும், அது நடைமுறை உண்மைகளிலிருந்து முற்றிலும் விலகி நிற்பதை நாம் உணர வேண்டும். இரண்டும் ஒரே மாதிரித்தான் என்று சொல்வது, சமமற்றவைகளைச் சமமாகக் காட்டுகின்ற முயற்சி.

சமமானவர்களைச் சமமற்று நடத்துதல் எப்படி முறையில்லையோ, அவ்வாறே சமமற்றவர்களைச் சமமாக நடத்துவதும் முறையற்றதே ஆகும். இப்படி இருவரையும் சமப்படுத்துகிற நிலை, இருவரில் யார் மிக மோசமானவர்களோ அவர்களுக்கே மறைமுகமான உதவியாக இருக்கும் என்பதை நாம் மறுக்க முடியாது.

தமிழகச் சூழலில் கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஒரே மாதிரித்தான் என்று சொல்வது மறைமுகமாக, மிக மோசமான சக்தியாக இருக்கிற ஜெயலலிதாவுக்கு உதவுகிற செயல்தான். தி.மு.க மீதும், தி.மு.க கூட்டணியின் மீதும், குறிப்பாகத் தி.மு.க. தலைமையின் மீதும் நம்மில் பலருக்கு கடும் விமர்சனங்கள் இருக்கலாம். அந்த விமர்சனங்களில் நியாயங்களும் இருக்கலாம். ஆனால், ஜெயலலிதாவோடு இதனைச் சமப்படுத்திச் சொல்வதென்பது எந்த விதத்திலும் நியாயமாகாது.

இந்த ஒப்பீட்டு முறையே தவறானது என்று கருத வேண்டியதில்லை. தேர்தல் களத்தில் ஒப்பீட்டு முறை தவிர்க்க முடியாததாக ஆகி விடுகிறது. நமக்கு வேறு மாற்று இல்லை என்கிற போது ஒப்பீட்டு முறையில் ஒன்றை நாம் தேர்ந்தெடுத்தே ஆக வேண்டிய நிலையும் உள்ளது. ஜனநாயகமின்மையும், சமத்துவமின்மையும், ஆதிக்கப்போக்கும், ஆணவ குணமும், பார்ப்பனியத்தின் அடிப்படைத் தன்மைகள் என்றால் அவற்றின் முழு உருவாக ஜெயலலிதா இன்றைக்கு விளங்கிக் கொண்டிருக்கிறார்.

இலட்சக்கணக்கான அரசு ஊழியர்களை வேலை நீக்கம் செய்து, பல்லாயிரக்கணக்கானவர்களை சிறையில் அடைத்து, ஒரு மிகப் பெரிய சர்வாதிகாரி போல அவர் நடந்து கொண்டார். பத்தாயிரம் சாலைப் பணியாளர்களை வேலை நீக்கம் செய்தார். அவர்களையெல்லாம் மீண்டும் வேலைக்குச் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னரும், அதை ஏற்காமல் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

வெள்ள நிவாரண நிதி வழங்குவதில் ஏற்பட்ட ஒழுங்கின்மை, நிர்வாகக் குறைவு காரணமாக பல பேர் நெரிசலில் சிக்கி மாண்டு போனார்கள். வெள்ளத்தில் கூடத் தப்பிப் பிழைத்த அவர்களை வெள்ள நிவாரணம் அடித்துச் சென்று விட்டது. தன் குற்றத்தை உணர்ந்து வருத்தம் தெரிவிப்பதற்குப் பதிலாக, தி.மு.க.வைச் சேர்ந்த தனசேகரன் எனும் ஒரு மாநகராட்சி உறுப்பினர்தான் அனைத்துக்கும் காரணம் என்று கூறி அவரைச் சிறையில் அடைத்தார். அவரைப் பிணையில் விடுமாறு உயர்நீதி மன்றம் ஆணையிட்டபோதும் அதை ஏற்க மறுத்தார். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்த பிறகும் தன் குற்றத்தை உணராமல் அவரைக் குண்டர் சட்டத்தில் அடைத்தார்.

இப்படி ஒவ்வொரு செயலிலும் தன் சர்வாதிகாரப் போக்கையே அவர் வெளிப்படுத்தினார். பார்ப்பனியத்தினுடைய நெடுநாள் ஆசையான மதமாற்றத் தடைச் சட்டத்தை அவரே நடைமுறைப்படுத்தினார். பொடா எனும் கொடிய சட்டத்தின் கீழ் வைகோ(!), நெடுமாறன், நக்கீரன் கோபால், சாகுல்அமீது உள்ளிட்ட பலரை ஒன்றரை ஆண்டுக் காலம் சிறையில் அடைத்தார்.

தங்கள் தாயகத்தின் விடுதலைக்காகப் போராடும் தமிழீழ விடுதலைப் புலிகளை தன் பகைபோல் கருதி, அவர்கள் மீது எப்போதும் காழ்ப்பை உமிழ்ந்தார். ஆளுங்கட்சியாய் இருக்கும் போதும் சரி, எதிர்க்கட்சியாய் இருக்கும்போதும் சரி, தமிழ் வழிக் கல்வியை தொடர்ந்து எதிர்த்தார். இப்படி தமிழுக்கும் தமிழருக்கும் எதிரான பார்ப்பனிய குணத்தை வெளிப்படுத்துகிறவராகவே அவர் என்றைக்கும் இருந்தார்.

சட்டமன்றத்தில் அவர் பேசிய பேச்சும், பேசிய விதமும் ஆணவத்தின் உச்சத்திலேயே எப்போதும் இருந்தன. அவர் தன் ஆட்சியில் நல்லவை எவற்றையுமே செய்யவில்லையா? நல்ல திட்டங்களே இல்லையா? என்றால் இருந்தன என்பதை நாம் ஏற்கத்தான் வேண்டும். ஆனால் எப்போது?

நாடாளுமன்றத் தேர்தலில் அதிர்ச்சி தரத்தக்க மிகப் பெரும் படுதோல்வியை அவர் சந்தித்ததற்குப் பிறகு, தன் போக்கை அவர் மாற்றிக் கொண்டார். மதமாற்றத் தடைச் சட்டத்தை திரும்பப் பெற்றார். அரசு ஊழியர்களுக்கு வேலை வழங்கினார். சாலைப் பணியாளர்களைப் பணியில் சேர்த்துக் கொண்டார். ஆடுகளை, கோழிகளை வெட்டலாம் என்று அறிவித்தார். வெள்ள நிவாரண நிதி என்று குடும்ப அட்டைக்கு 1000, 2000 என்று பணத்தை அள்ளி வழங்கினார்.

இன்றைக்கு பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அரசினுடைய நிதியகம் முற்றிலுமாக காலியாகிற அளவுக்கு அள்ளி அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறார். எல்லாம் தோல்விக்குப் பிறகு! எனவே இந்த இடத்தில் நாம் ஒன்றைச் சிந்திக்க வேண்டும்.


அவர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு நாட்டுக்கு செய்தவை எல்லாம் தீங்குகள். தேர்தலில் தோல்வியடைந்த பிறகு அவர் செய்தவை எல்லாம் நன்மைகள். எனவே, அவர் வெற்றி பெற்றால் நாட்டுக்கு கெடுதல் செய்வார் என்பதும், தோல்வி அடைந்தால் நன்மைகள் செய்வார் என்பதும் நமக்கு விளங்குகின்றது. இப்போது நம் முன்னால் இருக்கின்ற கேள்வி, நாட்டுக்கு நன்மை செய்கிறவராக அவரை ஆக்க வேண்டுமா? தீமை செய்கிறவராக ஆக்க வேண்டுமா? என்பது தான். தேர்தலில் படுதோல்வி அடைந்தால் மட்டுமே அவர் நல்லவைகளை நினைத்துப் பார்க்கிறவராக இருக்கிறார். எனவே அதற்கான வழியை நாம் வகுக்க வேண்டும். இந்தக் கருணையில்லா ஆட்சி கருகி ஒழிய வேண்டும் என்பதே நம் அனைவருடைய விருப்பமாகவும் வேண்டுகோளாகவும் இருக்க வேண்டும். அதற்கான முயற்சிகளையும் நாம் செய்ய வேண்டும்.

இந்த இடத்தில் நான் இன்னொன்றையும் நினைவு கூற வேண்டும். பார்ப்பனியத்தின் குணம் என்ன என்பதை மறைந்த மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள் மிகச் சரியாகத் தன் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டார். ‘எட்டினால் தலையைப் பிடி, இல்லையேல் காலைப் பிடி' என்பதுதான் பார்ப்பனியம் என்றார் அவர். ஜெயலலிதாவோடு இதனை ஒப்பிட்டு பார்க்கையில் அந்த வரிகள் மிகப் பொருத்தமாக இருக்கின்றன. எட்டிய போதெல்லாம் நம் தலையைப் பிடித்தார். எட்டாத நிலையில் கால்களைப் பிடித்தார். இயல்பான அந்த இனத்தினுடைய குணம் வாய்ப்பிருந்தால் தலையிலே ஏறி அமர்வது, வாய்ப்பில்லை என்றால் காலில் விழுவதற்கும் கலங்காமல் இருப்பது.

இதைத்தான் அய்யா பெரியார் அவர்கள் கூட, ‘பலித்தவரை...' என்பதுதான் பார்ப்பனியம் என்றார். எவ்வளவு பலிக்குமோ அவ்வளவு பார்க்கலாம். பலிக்கவில்லை என்றால் விட்டு விடலாம். எனவே, தங்களை நிறம் மாற்றிக் கொள்ள, உருமாற்றிக் கொள்ள எப்போதும் பார்ப்பனர்கள் தயாராகவே இருக்கிறார்கள் என்பதைத்தான் வரலாறு நமக்கு உணர்த்துகிறது. அதை மீண்டும் ஒரு முறை அழுத்தமாக ஜெயலலிதா செய்து காட்டியிருக்கிறார்.

எனவே, வருகிற தேர்தலில் அவருக்கு நாம் ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். அது, இந்தத் தேர்தலிலிருந்து அவரை அகற்றுவதாக இல்லாமல், அரசியல் அரங்கிலிருந்தே அவரை அகற்றுவதாக இருக்க வேண்டும். அதுவே நாட்டிற்கு நல்லது.


-----------------------------------------------------------------------------------

சுபவீ அவர்களின் இந்தக் கட்டுரை - எட்டப்பன், புரூட்டஸ், யூடாஸ்-தனமான துரோகிப்பயல்களுக்கு நல்ல செருப்படியாக இருக்கும் என நம்புவோம்.

12 February 2006

கர்ணனை மயக்கும் பசப்புக்காரி பாஞ்சாலி!

குழலியின் இந்த அருமையான காலத்திற்கேற்ற பதிவைப் படித்துக் கொண்டிருந்த அதே வேளையில் தினகரனில் இன்று காலை(பிப்.12 ஆம் நாள்) வெளிவந்திருக்கும் கலைஞரின் அட்டகாசமான 'உடன்பிறப்புக்குக் கடித'த்தையும் படிக்க நேரிட்டது!

'மாபாரதம்தான்' இவ்விரு பதிவுகளின் உள்ளீட்டின் களமாக இருக்கிறது என்றாலும் எத்துணை பொருத்தம்!

கலைஞரின் எழுத்தின் வீச்சு எப்போதும் போல - அதே அபார புனைவுத்திறனுடன் - அதிவேகப் புரவியாய்ப் பாய்ந்து வருகிறது!!... கலைஞரின் அந்தக் கடிதத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன் :)

-----------------------------------------------------------------------------------


தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

உடன்பிறப்பே, இரவு நேரம் - இரண்டு மணி! எழுதிக் கொண்டிருக்கும்போதே; உறக்கம் கண்களைத் தழுவியது- அரைத் தூக்கத்தில் ஒரு கனவு- அந்தக் கனவையும் அதனை யொட்டிய நிகழ்வையும்; இதோ உனக்கும் தெரிவிக்கிறேன். அதாவது;

அஸ்தினாபுரத்துக்கு அங்க தேச அதிபதி கர்ணன் விருந்தினனாக வந்தவன் மதிய உணவுக்குப் பிறகு, களைப்பு மிகுதியால் சற்று கண்ணயர்ந்து விடுகிறான்- அவன் காதோரம் சாய்ந்தும்-தோள் பட்டையில் படிந்தும் இருக்கிற "செல்போன்" சற்று சத்தமாகச் சிணுங்குகிறது.

தூக்கக் கலக்கத்திலேயே செல்போனில் பேசும் விசையை அமுக்கி, கர்ணன் "அலோ" என்கிறான்.

மறுமுனையிலிருந்து ஒலி கேட்கிறது-

ஒலி:- நான் சகாதேவன் பேசுகிறேன்
கர்ணன்:-எந்த சகாதேவன்? (வியப்புடன்) இ.ஆர்.சகாதேவனா? பூலித் தேவன் நாடகத்தில் பூலித் தேவனாக நடித்த சகாதேவன்தானே?

ஒலி:- இல்லையண்ணா-நான் பாண்டவர்களில் ஒருவன்-நகுலனுக்கும் இளையவன்-சகாதேவன்; பாண்டுவின் கடைசி மகன் அண்ணா!

கர்ணன்: -அண்ணனா? நான் எப்படி உனக்கு அண்ணனாக முடியும்?

சகாதேவன்: -சத்தியமாக நான் உன் சகோதரன்தான் அண்ணா! அம்மா குந்தி தேவி உன்னைப் பார்க்க வந்தார்களே-உண்மையைச் சொல்லியிருப்பார்களே! குந்தி தேவியின் பிள்ளையல்லவா நீ?

கர்ணன்:- அடடர் தாய் பிள்ளை- அம்மா மகன் சொந்த பந்தமெல்லாம் இப்போது நினைவுக்கு வருகிறதா? யுத்தம் என்றதும் என் தயவு தேவைப்படுகிறது- அன்றைக்கு என்னை சொந்த சகோதரனாக பாவித்து அங்கதேசாதிபதியாகவும் அமரச் செய்தவன்; என் நண்பன் துரியோதனன்! இப்போது அவனைப் பகைத்துக் கொள்ளச் சொல்லி அம்மாவும் தூது வருகிறார்; நீயும் என் கையில் தாது பார்க்கிறாய்..... எல்லாம் அந்தக் கண்ணன் செய்யும் சூது என்பது எனக்குத் தெரியும்.....

சகாதேவன்:-கோபிக்காதேயண்ணர் உன்னைப் போன்ற உத்தமர்கள் துரியோதனன் அணியில் இருக்கக் கூடாது- எத்தனையோ கொடையளித்த கை உனது கை- இப்போது எங்களுக்கு அதுதான் "நம்பிக்கை"! அதை நீட்டு அண்ணா!

கர்ணன்:-சகாதேவா!போதும் உன் புகழாரம்! நீ தர்மன் மீது கொண்டுள்ள விசுவாசத்தின் அளவும் எனக்குத் தெரியும்

சகாதேவன்:- தர்மண்ணாவை பேசச் சொல்லவா?

கர்ணன்:-வேண்டாம், வேணடாம்-உங்கள் ஐவருக்கும் சேர்த்துத் தான் அம்மா வந்து அழுது புலம்பிக் கெஞ்சிக்கூத்தாடி விட்டுப் போய் விட்டாரே! என் முடிவில் மாற்றமே இல்லை! நான் ஒரு தடவை சொன்னால்....எத்தனை தடவை சொன்னதாக அர்த்தம் தெரியுமா?.....

சகாதேவன்:- தெரியும் அண்ணா- ஒரு நிமிஷம் பாஞ்சாலி பேசணுமாம்-

கர்ணன்:-யார்?....

சகாதேவன்:-அதான்; திரௌபதி-

கர்ணன்:- அதெல்லாம் வேண்டாம்- என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை- (அதற்குள் செல்போனில் பெண் குரல் கேட்கிறது-)

பாஞ்சாலி:- ஹலோ - நான்தான் பாஞ்சாலி பேசுகிறேன்...

கர்ணன்:- நான் யாருடனும் பேசத் தயாராக இல்லை...

பாஞ்சாலி:- அய்வருக்கும் தேவி அழியாத பத்தினியெனறால்; நீங்கள் பேச மறுப்பது நியாயம்- நான் உண்மையில் மானசீகமாக கர்ணனாகிய தங்களுக்கும் மனைவியாக எண்ணி இருப்பவள்-நீங்கள் விரும்பாவிட்டாலும் நான் அப்படி விரும்பியவள்-

கர்ணன்:- என்ன புதிர் போடுகிறாய் பாஞ்சாலி?

பாஞ்சாலி:- நடந்ததைச் சொல்லி விடுகிறேன்; கொஞ்சம் அமைதியாகக் கேளுங்கள்-

கர்ணன்:- எல்லாம் விபரீதமாகத் தெரிகிறது- உம்; சொல்லும்மா...

பாஞ்சாலி:- பாண்டவர்களுடன் வன வாசம் செய்து வன வனாந்திரங்களைக் கடந்து சென்றபோது- தஞ்சை மண்டலத்தில் "விழுந்த மாவடி" என்ற ஊரில் ஒரு பெரிய மாமரம்! மரத்தடியில் ஒரு முனிவர் கடுந்தவம் செய்து கொண்டிருக்கிறார்- அந்த மாமரத்தில் ஒரே ஒரு குண்டு மாம்பழம்- அதை அருந்த வேண்டுமென்று ஆசைப்பட்டேன். உடனே என் கணவர்களில் ஒருவரான அர்ச்சுனன் அம்பு எய்து அந்த மாம்பழத்தைக் கீழே விழச் செய்தார்.

சப்தம் கேட்டு தவமிருந்த முனிவர் விழித்துக் கொண்டு "ஆகா! நான் எப்போதும் சிரஞ்சீவியாக வாழ்வதற்கு அந்த மாம்பழத்தைச் சாப்பிடக் காத்திருக்கிறேன்; அதற்குள் அதை அடித்துக் கீழே வீழ்த்திவிட்டீர்கள்- இதோ பிடியுங்கள் சாபம்! மாங்கனி விழுந்தது போல் உங்கள் தலைகளும் வெட்டுண்டு கீழே விழட்டும்!" என்று சாபமளித்துக் கூக்குரலிட்டார்!

நாங்கள் பயந்து நடுங்கி, பரந்தாமனை வேண்டி அழைத்து உயிர் பிச்சை கேட்டோம் - பரந்தாமன் சொன்னார் - "நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் மனதில் ஒளித்து வைத்திருக்கும் ஓர் உண்மையைச் சொன்னால் அந்த மாங்கனி ஒவ்வொரு உண்மைக்குமாக கொஞ்சம் கொஞ்சமாக மேலே உயர்ந்து சென்று- மாமரக்கிளையில் ஒட்டிக் கொள்ளும். அப்படிச் செய்துவிட்டால் முனிவர் சாபத்தையும் திரும்பப் பெற்றுக் கொள்வார்" என்று கூறினார்.

உடனே தர்மர், அவர் மனத்தில் மறைத்திருந்த ஓர் உண்மையைச் சொல்லவே, "மாங்கனி" - கொஞ்ச தூரம் மேலே உயர்ந்தது- இப்படிப் பாண்டவர் ஐவரும் ஆளுக்கொரு உண்மையைச் சொன்னவுடன், அந்தப் பழம், மரக்கிளைக்கு அருகே போய் நின்றுவிட்டது. கிளையில் அது ஒட்டிக் கொள்வதற்கு ஓர் உண்மைதான் பாக்கி!

கர்ணன்:- அந்த உண்மையை யார் சொல்ல வேண்டும்?

பாஞ்சாலி:- நான்தான் சொல்ல வேண்டும்- நான் மறைத்திருந்த உண்மையென்று ஒன்றைச் சொல்லியும் கூட மாங்கனி மரக்கிளையில் போய் ஒட்டவில்லை. அப்படியே நின்றது நின்றபடி இருந்தது-

அப்போது பரந்தாமன் கிருஷ்ணன் கோபத்துடன் என்னை நோக்கி; "பாஞ்சாலீ! எதையோ மறைத்துப் பொய் கூறுகிறாய்- நீ அந்த உண்மையைச் சொல்லாவிட்டால்; உங்கள் அனைவரது தலைகளுக்கும் ஆபத்து" என்று மிரட்டினார்.

அப்போது மிகவும் பயந்து போன நான் உண்மையாகவே உண்மையைச் சொல்லி விட்டேன்... மாங்கனியும் மரத்தில் போய் ஒட்டிக் கொண்டது-மகாமுனி சாபத்திலிருந்து நாங்களும் உயிர் பிழைத்தோம்... கர்ண பிரபூ! அப்படி நான் மறைத்திருந்த அந்த உண்மை என்ன தெரியுமா?

கர்ணன்:-என்ன அது? சொன்னால்தானே தெரியும்.....

பாஞ்சாலி:- பஞ்ச பாண்டவர் ஐந்து பேரே அன்னியில் எனக்கு ஆறாவதாகக் கர்ணன் மீதும் காதல் உண்டு என்பதே அந்த உண்மை.....

கர்ணன்:-(முகத்தை வெறுப்புடன் சுளித்துக் கொண்டு) ஓ!அந்த ஊர்ப் பெயர் "விழுந்தெழுந்த மாவடி" என்றிருந்து; சுருக்கமாக "விழுந்த மாவடி" என்று ஆன கதை இதுதானா? சபாஷ்! நல்ல கதை! நல்ல உண்மை!

பாஞ்சாலி:- இப்போதும் கேட்கிறேன்- உண்மை ஜெயிக்குமா?

கர்ணன்:-உண்மை ஜெயிக்கும்-அதற்கு உதாரணத்தை இங்கேயே இப்போதே கண்டிருக்கிறோம்- ஆனால் பாஞ்சாலியின் ஆசை ஜெயிக்காது- ஜெயிக்கவே ஜெயிக்காது!

பாஞ்சாலி:-சரி; என் ஆசை ஜெயிக்க வேண்டாம்-இந்தப் பாரதப் போரிலாவது, நீங்கள், எங்கள் பக்கம் வந்து உதவலாமே! ஏனென்றால் வென்றிடப் போவது நாங்கள்தான்....

கர்ணன்:-பாஞ்சாலியின் நம்பிககையைப் பாராட்டுகிறேன்-ஆனால் ஒன்று வெற்றியினால் மட்டும் ஒருவரின் பெயரும், புகழும் நிலைத்திருப்பதில்லை-மகாபாரத யுத்தம் நடைபெற்று முடிந்து-குருட்சேத்திரத்தில் பெருக்கெடுக்கப் போகும் குருதிப்புனலில் இரு தரப்பினரும் மிதந்து- இந்தப் போராட்டம் பற்றிய கதை மட்டும் வாழ்கிற போது -

மனைவியை பணயம் வைத்து சூதாடியவன் தர்மன் என்பதும்- சாவு சதிராடும் போர்க்களத்தில் கூட கொடை கொடுத்த வள்ளல் கர்ணன் என்பதும் அழியாத அத்தியாயங்களாக இருக்கும்...


(பேசிக் கொண்டே கர்ணன் செல்போனை நிறுத்தி விடுகிறான்-

பாஞ்சாலியும்- அவளது ஐந்து கணவர்களும் "அலோ"- "அலோ" என்றவாறு செல்போனை அழுத்திப் பார்த்து- பயனின்றி உதட்டைப் பிதுக்கியவாறு நிற்கின்றனர்)

(மீண்டும் "செல்போன்" ஒலிக்கிறது- பாஞ்சாலியும் பாண்டவர்களும் ஆவலுடன் ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி செல்போனைத் தங்கள் காதுகளில் வைத்துக் கொண்டு கேட்கிறார்கள் - செல்போனில் கர்ணனின் குரல்கேட்கிறது)

கர்ணன்:- ஆனாலும் ஒன்று சொல்லுகிறேன்- பாஞ்சாலியும் பாண்டவர்களும் கேட்டுக் கொள்ளுங்கள்- அன்று 'பாரதப் போர்' நடந்ததை இப் போது நினைவில் வைத்துக் கொண்டு ஏமாந்து போகாதீர்கள்- அந்தப் போரில் கிருஷ்ணனின் சூழ்ச்சியால் ஜெயித்து விட்டீர்கள்- அது வேறு யுகம்- திரேதா யுகமோ, துவாபர யுகமோ ஏதோ ஒரு யுகம்; இது உங்கள் பாஷைப்படி "கலியுகம்"- எங்கள் கருத்துப்படி ஜனநாயக யுகம்! இந்த யுகத்தில் கிருஷ்ணனின் சூழ்ச்சிகளுக்கும் பாஞ்சாலியின் பசப்புகளுக்கும் இடமில்லை- அவை எடுபடாது- வெற்றி எங்களுக்குத் தான் என்பதை உங்கள் "ஆருடப்புலி" சகாதேவனிடம் சொல்லி அதையும்.. கணித்து வைக்கச் சொல்லுங்கள்- அவன் 'தூது' தோற்றுவிட்டதற்காக என் ஆழ்ந்த அனுதாபத்தை அவனுக்கு தெரிவியுங்கள்...

(அது கேட்டு பாஞ்சாலியும் பாண்டவர்களும் ஒரே குரலில் "ஆ" என்று அலறுகிறார்கள்)

(கர்ணன் "கலகல"வென சிரிக்கிறான்)

உடன்பிறப்பே, அந்தச் சிரிப்பொலியில் நானும் கண்விழித்துக்கொண்டேன். கண்டது பாரதக் கதையின் அடிப்படையிலான கனவு என்றுணர்ந்ததுடன் அந்தக் கனவின் முடிவு, களிப்பூட்டுவதாக அமைந்ததால்; அதனை உனக்கும் சொன்னேன். நீயும் விழித்துக் கொள்; விடியப் போகிறது!


இவ்வாறு கருணாநிதி எழுதியுள்ளார்.

---------------------------------------------------------

அடே யப்பா! இந்தக் கதையின் 'புனைவுக்கு' மிகச் சிறப்பாக உரை எழுதுபவருக்கு (தில்லியிலிருந்து) அஸ்தினாபுரம் செல்ல பேருந்துச் சீட்டு எடுத்துத் தரப்படும்!! :)

19 January 2006

ஆதிச்சநல்லூர் - பொருநைவெளி நாகரிகம்






( படம் நன்றி : "தி ஃரண்ட்லைன்" )


கிட்டத்தட்ட ஒரு வருடமாக 'ஆதிச்சநல்லூர்' அகழ்வாய்வுகள் குறித்த செய்திகள் அவ்வப்போது வந்து கொண்டுதானிருக்கின்றன.

திருநெல்வேலி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் கடந்த வருட துவக்கத்தில் மிகப் பழமை வாய்ந்த புதைந்து போயிருந்த நாகரிகத்தின் அடையாளங்கள் கண்டெடுக்கப்பட்டன; அவை, அந்த இடம் மக்கள் கூடி வாழ்ந்த நாகரீகம் செறிந்த ஊரின் எல்லா அடையாளங்களையும் கொண்டிருந்ததாக அறியப்பட்டது.

பண்டைக்காலத்தில், 'பொருநை' ஆறு (தாமிரபரணி) தமிழர்களின் நாகரீகப் படிநிலைகளில் முக்கிய இடத்தைக் கொண்டிருந்ததை நமது பண்டை இலக்கியங்கள் வாயிலாகவும், வரலாற்றுக் குறிப்புகள் வாயிலாகவும் அறிய முடியும். 'குமரிக்கண்டம்' கொடுங்கடல் கொள்ளப்பட்ட பிறகு 'பொருநை'வெளிதான் தமிழர்களின் தாயகமாக இருந்திருக்க வேண்டும்.

இப்போது அக்காலம் குறித்துப் பல புதிய ஆராய்ச்சிகள் நிகழ்வது, தமிழர்களின் தொன்மை குறித்தும், இந்தியத் துணைக்கண்டத்தின் உண்மையான வரலாறு குறித்தும் தெளிந்து கொள்ள உதவும்.

இந்த அகழ்வாய்வு குறித்த விவரங்களை இங்கே மற்றும் இங்கே காணவும்.

வண்ணப் படங்களுடன் கூடிய மேலதிகச் செய்திகளுக்கு இங்கே பார்க்கலாம். அதிலே ஒரு படம்தான் மேலே பார்க்கிறீர்கள். (நன்றி : தி ஃரண்ட்லைன் )


குறைந்த பட்சம் கி.மு 1000 -லிருந்து கி.மு 3800 வரைக்கும் முந்தைய காலகட்டதிலான காலவரை கொண்ட மனித எலும்புகளும், சுதைமண் பாண்டங்களும(Potsherds) இந்த அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளன என்று சொல்கிறார்கள்! அதில் சிலவற்றில் ஆதிகால தமிழ் பிரம்மி எழுத்துகள் இருப்பதாகச் சொல்கிறார்கள்! :)

இறுதி முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும் - இந்த ஆய்வு முடிவுகளின் மூலம் - மிக மிக முக்கியமான உண்மைகள் வெளிவரும்.

1. தமிழர்களின் ஆதிதாயகம் தென்னக - குமரிக்கண்டப் பகுதியே

2. ஆரியர்களுக்கு முந்தைய, வேதகாலத்துக்கு முந்தைய - திராவிட/தமிழ் நாகரிகம் இந்தியாவில் வளர்ந்திருந்தது நிறுவப்படும்.

3. தமிழர்களுக்கும், ஆதி சீனர்களுக்கும், மெசப்பொட்டொமிய-மத்திய கி்ழக்கு நாகரிகங்களுக்க்கும் இருந்த வணிகத் தொடர்புகள் மேலும் தெரிய வரும்.

இன்னும் பற்பல உள்ளது!


ஹிந்துஸ்தாம் டைம்ஸில் வந்த இந்தச் செய்தியில், பேராசிரியர் பத்மனாதன் ராகவன் சொல்லும் செய்திகள் மேலும் வியப்பும், உவகையும் அளிப்பவை.

ஆஸ்திரேலியாவில் - கான்பெர்ரா நேஷனல் பல்கலைக்கழகத்தில், மானுடவியலாளராகப் பணியாற்றும் டாக்டர் ராகவன் அவர்களை ஆஸ்திரேலியாவில் இருக்கும் யாராவது வலைப்பதிவாள நண்பர்கள் தொடர்பு கொண்டு மேலதிக விவரங்கள் வலைப் பதிய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்!

17 January 2006

மயிரும் சமஸ்கிருதமும்

ஆடுதுறை பக்கத்திலெ ஏதோ ஒரு மங்கலம்
ஆத்துத்துறையில நின்ன 'சாமி'மாரு வீட்டுப்புள்ள
ஏக்கத்தில பாத்துச்சு 'தொப்புளான்' மவன் எசக்கிய

கருஞ்சடையா நெளியும் தலைய பயபுள்ள வாருரானா?
முகத்தில வந்துவுழும் முடி
காத்துல பாடும் ஜதி!

சடை பின்னி ரிப்பன் கட்டி
அடங்காத கருப்புநதி!

'சாமி'புள்ள சின்னப்பய ...சங்கரன் அழுதுபுட்டான்
என் முடிஇன்னிக்கோட போச்சே

குடுமி வச்சு குருகுலம் போக
என் தலை மயிரும் போச்சே

இப்பிடி எத்தனையோ ஆயிரம் ஆயிரமா
சின்னப்பயக மயிரும் போச்சு
சிரிப்பு விளையாட்டும் போச்சு

இத்தன வருசம் போச்சு
வளந்தது

சமஸ்க்ருதமா, மயிரா
போ

கைபர் போலன் ஏர்வேஸும், அபிஷ்டுகளும்

ஆகக்கூடி கைபர் கணவாய்ப் பயணம் என்கிற ஈராயிரம் வருடக் கனவு நனவாகப் போகிற மகிழ்ச்சியில் மாமாக்களும், மாமிகளும் ஆரவாரித்துக் கொண்டிருந்தார்கள்.

ரெண்டாயிரம் வருஷத்துக்கப்பறம் பொறப்பட்டு வந்த எடத்துக்குப் போறதுன்னா எப்பேர்ப்பட்ட பாக்யம்?!

12,000 கோடி பட்ஜெட்டில் நிறைவேற்றப்பட்ட 'கைபர்-போலன்' கணவாய் ஏர்வேஸின் பிரதெயேக விமான தளத்தின் ஓடுபாதையில் ரிக், யஜுர், சாம வேத யாகங்கள் ஒருவழியாக நடந்து முடிந்து எல்லாப் பயணிகளுக்கும் யாக குண்டப் பிரசாதங்கள் திருப்தியாய் வினியோகிச்சாச்சல்லவா?

யாகம்னா சும்மாவா? - அவா ஷேமத்துக்காக முக்ய எதிரிகளைப் போட்டு 'வறுத்து' எடுத்த யாகம்னா அது!


சாஸ்திர, பிரம்ம சூத்திர, ஸ்ருதி-ஸ்மிருதி அறிவைப் பிழிஞ்சு எடுத்த 'விமான சாஸ்திரா' வில சொல்லியிருக்காப்ல செஞ்ச ஹை-டெக் 'புஷ்பக விமானம்னா' இவாளை கொண்டு சேக்கப் போறது!

பல்லி கணெஷ்தான் பைலட் - நாசாவுக்கெல்லாம் போயி 'டிரெய்னிங்' எடுத்தவா ஆச்சே!


எல்லாரையும் 'கியூவில' நிற்கறதுக்கு டைரக்டர் 'வாலச்சந்தர்' டைரெக்ட் பண்ணிண்டு இருக்கச்சே, ஒரு இளவயசு பொண்ணாண்ட அவர் எப்படி நிக்கணும், பிளேனில எப்ப்டி ஏறணும், எப்பிடி ஸீட் பெல்ட் போடணும்னு சொல்றச்செ பக்கத்தில இருந்த சூளமேடு கடராஜன் 'அண்ணா! என்னமா டைரெக்ட் பண்றேள்' னு கட்டிப் பிடிச்சு அழுதுட்டார் (அப்பிடியே 'வாலச்சந்தர்' வைத்திருந்த வாலட்டையும் அடிச்சுட்டர்!)

பக்கத்துல நோஞ்சானாட்டமா நின்னுண்டிருந்த ஒர் சோப்ளாங்கி கிழட்டு மாமா Dர். பஜாத்தா - பக்கத்தில அவரு மூஞ்சியே பத்துட்டு நின்னுட்டுருந்த பசங்களாண்ட 'என்னடா இந்த Spencer Wells அம்பி ரிசர்ச் பண்ணான்? ஒண்ணும் வெளங்கல. மனுசன் ஆப்பிரிக்கல இருந்து வந்தான்றான். நேக்குத் தெரியும் அது கைபர்தான் - இல்ல கொஞ்ச தூரம் தள்ளிப் போனா வரும்ல 'காகேசியன்' மலை அங்கதான். கைபர் போன ஒடன பாரு - நான் புது குரோமோசோம் அர்ரய்ச்சி பண்ணி 'உரை' எழுதி அவனக் கிழிச்சுடறேன். அவன விட இதில நான் சீனியர்.. தெரிமோ - என ஆலந்து கொண்டிருந்தார்.

பக்கத்தில் கும்பலாக கத்தி சண்டை போட்டுக் கொண்டிருந்த மாமாக்களுக்கு மத்தியிலிருந்து - ஒரு மொட்டை மாமா கோபமாக சத்தம் போட்டுட்டே விமான தளைத்தை விட்டு வெளியே செல்கிறார் - 'நேக்கு கோமளவல்லி ஏர்வேஸ்-ல டிராவல் பண்ணாத்தான் ரிலாக்ஸ்டா இருக்கும்'னுட்டு சொல்லிட்டுப் போயிடறார்.

ஒரு கிரவுண்டு இஞ்சினியர் கோயான் 'ஆமா இவனுங்க லாரில போனால மிச்ச எடம் இருக்கும் - இதுல பிளைட்டு கேக்குதா' என கலாய்த்ததை - தலைமுடிக்கு 'டை' அடித்தபடி வந்த 'கப்பு' மணிசாமி மாமா கேட்டு - 'உன் மேல பூனை நஷ்ட வழக்கு' போட்டுடுவேன் - எங்களவாளண்ட மன்னிப்புக் கேக்கலன்னா' என்ற மிரட்ட ஆரம்பிக்க - அதற்குள் எல்லோரும் சமாதானம் பண்ணி ஏற்றுகிறார்கள்.

கடைசி நேரத்தில் ஒரு உருவம் வந்து பிளைட்டில் ஏறுகிறது 'urban legend' கொலைகாரி ரேஞ்சுக்கு பெரியதாக தலை மயிர் மறைக்கும் மூடி போட்டு!
அதன் கையில் எதையோ ரொம்ப உஷாராக மறைத்தபடி அது உட்கார்ந்தது.

ஒன் வே பிளேன் என்பதால் யாருக்கும் பாராசூட் backup இல்லை; வெறும் cross-belt-தான்!

ஏர்ஹோஸ்டஸ்-கள் எல்லோருக்கும் 'சுரா' பானம் வழங்க ஆரம்பித்தனர், அது 'மங்கல' பானம் என்பதால். குடித்துவிட்டு எல்லோரும் சேர்ந்து 'ஜுய் கைபர்! ஜுய் போலன்! ஜுய் ஜுய்! என கூச்சலிட்டதும் - பல்லி கணேஷ் பிளைட்டை தூக்கி விட்டார்!

கர்நாடகாவைத் தாண்டி, மகாரஷ்டிரா போய்க்கொண்டிருந்தது பிளைட் - குஜராத்..... திடீரென்று தரைக்கட்டுப்பாட்டு ரேடார்களினின்றும் காணாமற் போய்விட்டது!

பி.கு:

அன்றிரவு Bun Tea TV-இல் ஒரு இருளான கிராமத்து பழங்குடியினக் கிழவர் திகிலோடு பேசிக் கொண்டிருந்ததை ஆங்கில பெயர்ப்பில் ஓட்டினார்கள்...."ஏதோ ஒரு பெரிய பறவை அந்தக் காட்டத் தாண்டி விழுந்து சத்தம்போட்டு நெருப்பக் கக்க்கிட்டே விழிந்துச்சு...அப்போ அதோட வயித்திலருந்து ஒரு மண்டை மயிர்மூடிட்டு ஒரு கறுப்பு உருவம் பறந்து வந்து அந்தப் பள்ளத்தாக்குல விழுந்து ஓடுச்சு"