28 January 2011

தமிழ்நதியின் பெருக்கில் அடித்துச் செல்லப்படும் புளுகு மூட்டைகள்

தமிழ்நதி அவர்களின் வலைப்பக்கங்களில் படித்த மிக இன்றியமையா, காலத்துக்குத் தேவையான கட்டுரையை இங்கே பதிவு செய்கிறேன். முழுமையாக...

இதைப் பதிவிட்ட தமிழ்நதிக்கு நன்றிகள் பல உரித்தாகும்.

சுகுணா போன்ற "Intellectual Masturbation" செய்யும் "பின் நவீனத்துவ" (அதாவது குண்டிப்புறத்துவ) வியாதிகள் இதற்குப் பதில் சொல்ல முடியாது.

ஒரே மூச்சில் நக்சல்பாரிகளுக்கு பூக்கொத்தும், புலிகளுக்கு கத்திக்குத்தும் விடும் - சாகசம் செய்வதில் - இந்து ராம்களுக்கும் - இந்த முற்போக்கு வாந்திகளுக்கும் ஒரு வேறுபாடும் இல்லை.

தமிழ்நதியின் பதிவு:

http://tamilnathy.blogspot.com/2011/01/blog-post.html

ஷோபா சக்தி, சுசீந்திரன் உள்ளிட்ட‌ ஆதிக்க சாதியினரின் ‘புலி’த் தீண்டாமை!!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஈழ மீனவ சமுதாயத்தின் கரையாளர் பிரிவைச் சார்ந்தவர் என்பதும், ஈழத்தில் மீனவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்பதும் பல பேர் அறியாத செய்தி. புலிகள் அமைப்பு ஈழத்தில் வலுப்பெறும்வரை, தமிழர்களின் தலைமை வெள்ளாள ஆதிக்க சாதியிடம் இருந்தது. அவர்கள் சாதிஒடுக்குமுறை குறித்து எந்தவொரு அக்கறையும் கொண்டிருக்கவில்லை.

தமிழர்களின் தனிப்பெரும் சக்தியாக புலிகள் வளர்ந்தபோது, சாதி ஒதுக்கலுக்கு எதிராக புலிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் (இயக்கத்தில் கலப்புத் திருமணம்தான் செய்ய வேண்டும்; இயக்கத்தில் தீண்டத்தகாத மக்களுக்கு முக்கிய பொறுப்புகள், தீண்டாமைக் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள்) வெள்ளாள சாதியினரிடம் இயல்பாகவே ஆத்திரத்தை மூட்டியதில் ஆச்சரியமில்லை.

அந்த ஆத்திரத்தில் தொடங்கியதுதான் முக்கால்வாசி புலி எதிர்ப்பு அரசியல் என்று வளர்மதி (கீற்று கட்டுரைகள்) கூறுவது ஆராயப்பட வேண்டியது.

நான்காம் கட்டப்போரில் புலிகள் இயக்கம் முற்று முழுதாக தோற்றபின்பு, ஈழ மக்களின் சம உரிமைகளுக்காக ஒரு துரும்பையும் அசைத்துப் போடாத - இன்றும் புலி எதிர்ப்பு அரசியல் மட்டுமே பேசிக்கொண்டிருக்கும் அகிலன் கதிர்காமர், சுசீந்திரன், டக்ளஸ் தேவானந்தா, ஷோபா சக்தி இவர்களின் சாதி பின்புலத்தைப் பார்த்தோமானால் எல்லோரும் ஆதிக்க சாதி வெள்ளாளர்கள்.

தலித் அரசியலை முன்வைத்து இவர்கள் பேசும் புலிஎதிர்ப்பு அரசியலுக்குப் மாற்றாக பிரபாகரன், தமிழ்ச்செல்வன் ஆகியோரின் ஒடுக்கப்பட்ட‌ சாதிப் பின்புலம் குறித்தும், புலிகளின் சாதியொழிப்பு நடவடிக்கைகள் குறித்தும் பேச வேண்டிய அவசியம் இங்கிருக்கும் ஈழ ஆதரவாளர்களுக்கு இருக்கிறது.

தலித் முரசு 2001 ஜனவரி இதழுக்கு அளித்த பேட்டியில் பழ.நெடுமாறன் இதுகுறித்துப் பேசியிருக்கிறார்.

"... ... இந்தியாவில் எப்படி பார்ப்பனர்கள் ஆதிக்க சாதியாக இருக்கிறார்களோ, அதேபோல் ஈழத்தில் வெள்ளாளர்கள் ஆதிக்க சாதியாக இருக்கின்றனர். ஈழத்தில் ‘இலங்கைத் தமிழர் காங்கிரஸ்’ என்றொரு கட்சி துவங்கிய காலத்தில் இருந்து இறுதியாக ‘தமிழர் விடுதலைக் கூட்டணி’ வரை ஏற்பட்ட தலைமை அனைத்தும் – வெள்ளாளர் தலைமைதான். இவர்களை மீறி யாரும் எதுவும் செய்ய முடியாது. போராளி இயக்கங்களான ஈ.பி.ஆர்.எல்.எப்., டெலோ, பிளாட் என எல்லா தலைமையும் வெள்ளாளர் தலைமைதான்.
இதில், விடுதலைப் புலிகளின் தலைமை மட்டும்தான் மாறுபட்டது। விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், தாழ்த்தப்பட்ட மீனவ சமூகத்தைச் சேர்ந்தவர் (மீனவர்கள் அங்கு தீண்டப்படாத சமூகமாகும்). அதனாலேயே இவர்கள் பிரபாகரனை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். ‘பிரபாகரனை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்’ என்று என்னிடமே வெளிப்படையாக பேசியும் இருக்கிறார்கள்.


அமிர்தலிங்கம் ஒரு பெரிய தலைவர்। அவரிடம் நான் பேசிக்கொண்டிருக்கும்போது, ‘பிரபாகரனை நீங்கள் இணைத்துக் கொள்ள வேண்டும்; அதுதான் சரியானது’ என்றேன். அப்போது அவருடைய மகன் குறுக்கிட்டு, பிரபாகரனின் சாதியைப் பற்றி மிகவும் மோசமாக ஒரு வார்த்தையை சொல்லித் திட்டினார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அமிர்தலிங்கமும் மழுப்பி விட்டார்.

பிறகு இதுகுறித்து நான் விசாரித்தபோதுதான், எனக்கு உண்மைகள் தெரிய வந்தன। சாதி ஒரு முக்கியமான காரணம். ஒரு ஆதிக்க சாதியின் பிடி போவதில் அவர்களுக்கு ஒரே கோபம். ஆனால் இன்றைக்கு இதை எல்லாம் தாண்டி பல தரப்பட்ட மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தலைவராக பிரபாகரன் மலர்ந்திருக்கிறார். விடுதலைப் புலிகள் இயக்கத்தை – சாதிக்கு அப்பாற்பட்ட இயக்கமாக உருவாக்கியிருக்கிறார்கள்.

எல்லா சாதியைச் சார்ந்த இளைஞர்களும் இதில் உள்ளனர்। அதுமட்டுமல்ல இயக்கத்தில் திருமணம் செய்து கொள்வதற்குக்கூட இரண்டு நிபந்தனைகள் உண்டு. 1.சாதி மறுப்புத் திருமணம். 2.விதவைத் திருமணம். இயக்கத்தில் எல்லாத் திருமணங்களும் அப்படித்தான் நடைபெறுகின்றன. அது வேகமாகப் பரவி வருகிறது. இதன் மூலம் மக்கள் மத்தியில் இக்கருத்து செயல்வடிவம் பெற்று வருகிறது.

விடுதலைப் புலிகளின ஆதிக்கத்தில் இருக்கிற பகுதிகளில் எல்லாம் தீண்டாமையை அடியோடு ஒழித்து விட்டார்கள். சாதிவெறியுடன் யாராவது பேசினால், செய்தால் கடுமையான தண்டனையை புலிகள் விதித்து வருகின்றனர். அங்கு நடைபெறும் போராட்டம் வெறும் அரசியல் போராட்டமாக நடைபெறவில்லை; அது சமூகப் போராட்டமாகவும் ஒரே நேரத்தில் நடைபெறுவதால், இதெல்லாம் அங்கு சாத்தியமாகிறது..."
ஆனால் அதற்குப் பின் - ஷோபா சக்தி, அ।மார்க்ஸ் போன்றோர் உண்மையைத் திரித்து பொய்களைக் கட்டவிழ்த்தபோது - தமிழ்த் தேசியவாதிகள் போதுமான அளவு எதிர்வினையோ, உண்மையைக் கவனப்படுத்தும் கருத்துக்களையோ வெளிப்படுத்தவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பின் அண்மையில் மீனவர்கள் மாநாடு ஒன்றில் திருமாவளவன் இதுகுறித்துப் பேசியிருக்கிறார். ஆனால் அவருக்கு எதிராக - பிற்போக்குத் தன்மை கொண்ட தமிழ்த் தேசியவாதிகள் சிலர் ‘எப்படி பிரபாகரன் மீது சாதி அடையாளம் பூசலாம்’ என்று முண்டாசு கட்டி கிளம்பிவிட்டார்கள். அதற்கு திருமாவளவன் இந்த வாரம் குமுதம் ரிப்போர்ட்டரில் (20.1.2011) பதில் அளித்துள்ளார்.


"... .... மறுநாள் காலையில் பிரபாகரனைப் பார்க்க அழைத்துச் செல்லப்பட்டேன்। முதல்நாள் நான் அண்ணனிடம் கொடுத்திருந்த எங்கள் கட்சியின் 'தாய்மண்' இதழ்களை அவர் படித்துவிட்டு வந்திருந்தார். 'தாய்மண் இதழ்களைப் படித்துவிட்டு இரவெல்லாம் எனக்கு மன உளைச்சலாக இருந்தது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் வாயில் மலத்தைத் திணிக்கின்ற அளவிற்கு தமிழகத்தில் சாதி அவலங்கள் தொடர்வதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது. தமிழ்நாட்டுத் தலைவர்கள் எப்படி இதை சகித்துக் கொள்கிறார்கள்?" என்று கேட்டார்.

அதனைத் தொடர்ந்து ஈழத்தில் நிலவும் சாதிப் பிரச்சனைகளைப் பற்றி நெடுநேரம் பேசினார்। புலிகள் இயக்கம் சாதி அடையாளமே இல்லாமல் கட்டமைக்கப்பட்டிருப்பதாகவும், சாதி வெறியர்களுக்கு கடும் தண்டனைகள் வழங்கி வருவதாகவும் கூறி சில நிகழ்வுகளையும் கூறினார்.

அப்போது, 'தொடக்கத்தில் என்னை ஒரு கரையாளர் என்ற அளவில்தான் பார்த்தார்கள். என்னுடைய திருமணத்திற்குக் கூட எதிர்ப்பு வந்தது. இப்போது ஈழத்தில் அப்படியொரு நிலை எதுவும் இல்லை' என்று மிகுந்த உருக்கத்தோடும், கொதிப்போடும் பேசினார்.
.....
.....
இந்தத் தகவலைத்தான் கடந்த டிசம்பர் 11ம் தேதி திருச்செந்தூரில் நடைபெற்ற மீனவர் வாழ்வுரிமை மாநாட்டில் பேசினேன். உங்களில் ஒருவர்தான் அண்ணன் பிரபாகரன். அவர் மீனவ சமூகத்தின் கரையாளர் பிரிவைச் சேர்ந்தவர். எனவே, உங்கள் தாழ்வு மனப்பான்மையை உதறி எறிந்துவிட்டு, நெஞ்சை நிமிர்த்தி நடை போடுங்கள்' என்று அந்த மேடையில் பேசினேன். அதை இப்போது ஒரு மாதம் கழித்து பிரச்சினை ஆக்குகிறார்கள். ... ... "
புலிகள் மீது சுமத்தப்படும் வெள்ளாளக் கறையை போக்க விரும்புவர்கள், இந்த சந்தர்ப்பத்தில் திருமாவளவனை ஆதரிக்க வேண்டியது அவசியம். இல்லையென்றால் கேள்வி மட்டுமே கேட்கத் தெரிந்த ‘இலக்கிய தருமி’கள் விடாமல் புலிகள் மீது சேறு அடித்துக் கொண்டிருப்பார்கள்.

-மினர்வா

மேற்கண்ட கட்டுரையை இங்கும் வாசிக்கலாம் - www।keetru।com
நன்றி- கீற்று.காம்

---
புலிகள் தொடர்பான சாதிப் பூச்சாண்டி அல்லது புரளிகள்

கீற்று இணையத்தளத்தில் மினர்வாவால் எழுதப்பட்ட கட்டுரை புதிய உரையாடல்களை முன்னெடுப்பதாக அமைந்திருப்பது குறித்து மகிழ்ச்சி. விடுதலைப் புலிகளை பாசிசவாதிகள், சாதி வெறியர்கள், பிள்ளை பிடிகாரர்கள், பயங்கரவாதிகள் என்றெல்லாம் சித்தரிப்பதில் புலியெதிர்ப்பாளர்கள் வெகுவாக முயன்று அதில் ஓரளவு வெற்றியுங் கண்டிருக்கும் இக்காலகட்டத்தில் இத்தகைய உரையாடல்கள் அவசியமாகின்றன. புலிகள் தங்கள் மீதான விமர்சனங்களை எதேச்சாதிகாரப் போக்குடன் எதிர்கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டினை முன்வைத்து புலியெதிர்ப்புத் திருவிழாவை கோலாகலமாகக் கொண்டாடி வந்த புலம்பெயர்ந்த, பெயராத “அறிவுஜீவிகள்” புலிகளின் வீழ்ச்சியுடன் அதை நிறுத்திக்கொண்டிருக்க வேண்டும். ஆனால், ”ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்கமாட்டா”என்பதற்கிணங்க, அவர்களால் திடுதிப்பென்று திரையை இழுத்து மூடிவிட்டுப் போகமுடியவில்லை. ஆட்களற்ற வெட்டவெளியைப் பார்த்து தொடர்பேச்சை நிகழ்த்திக்கொண்டிருப்பதன் பின்னாலுள்ள வன்மத்தை, காழ்ப்புணர்ச்சியை, குரோதத்தை என்னவென்பது...? மணிமேகலையின் அட்சயபாத்திரம்போலும் அள்ள அள்ளக் குறையாத கோபம் அதுவெனக் கொள்ளலாகுமா? மக்களை அழித்து, அவர்தம் வாழ்வாதாரங்களை அழித்து, சிறைப்படுத்தி சித்திரவதைப்படுத்தியும் தீர்ந்துவிடாத இனவெறியால் உன்மத்தம் கொண்டு மாவீரர்களின் கல்லறைகளைச் சிதைத்து வேரும் இருக்கலாகாதென ஆழ உழுது கல்லி எறிந்த பேரினவாதிகளுக்கும் இவர்களுக்கும் இடையில் என்ன பெரிய வித்தியாசம் இருந்துவிடப்போகிறது?

புலிகள் போரிட்டார்கள். அவர்களே மாண்டுபோனார்கள். வெளியிலிருந்தபடி மக்களுக்காகப் பேசிய, “புலிகளிடமிருந்து மக்களைக் காப்பாற்றுங்கள்“ என்று பதறிய அந்த உதடுகளால் அதே வீச்சோடு இலங்கை அரசாங்கத்தைப் பார்த்து அந்தக் கேள்விகளைக் கேட்க முடியாமற் போனது ஏன்? ஆக, அதிகாரங்களை எதிர்ப்பது என்பது, “புலியதிகாரத்தை எதிர்ப்பது“என்பதனோடு முடிந்துபோகிறதா?

புலிகள் வன்னிப் பகுதியைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தபோது (இங்கு கட்டுப்பாடு என்பதற்கு,இராணுவ மயப்படுத்தலிருந்து விலக்கி எனப் பொருள் கொள்க।) பல தடவை நான் அங்கு போயிருக்கிறேன். நள்ளிரவிலும் பெண்கள் பயமற்றுத் திரியக்கூடிய பாதுகாப்பான ஒரு பிரதேசமாக அந்த நிலம் ஒளிர்ந்துகொண்டிருந்தது.அங்கு சாதியின் அடையாளங்கள் எதையும் நாங்கள் பார்க்கவில்லை. இயக்கத்துக்குள் இருந்த இதர போராளிகள் என்ன சாதியினர் என்பதைப் பற்றி யாரும் கேட்பதுகூட குற்றமாகக் கருதப்பட்டது. எனக்குத் தெரிந்த (சாதியும் தெரிந்த) பல போராளிகள் இருந்தார்கள். அவர்களில் அநேகமானோர் இறுதிப் போரில் மாவீரர்கள் ஆகிவிட்டார்கள். அவர்களுடைய வாழ்வு உன்னதமானது. அவர்களுக்கிடையில் இருந்த பந்தம் கண்ணீரை வரவழைக்க வைக்குமளவிற்கு நெருக்கமானது. தோழர்களை, தோழியரை தாக்க சீறிப் பாய்ந்து வந்த துப்பாக்கிக் குண்டை கணமும் தாமதியாது தங்கள் மார்பில் ஏந்தி மடிந்த துாய்மையான போராளிகள் வாழ்ந்த புனிதமான மண் அது. இவர்கள் தமிழ் திரைப்படங்களில் காட்டப்படுவதுபோன்ற, கண்ணீரை பிழிந்து கறக்க எத்தனிக்கும் பொய்மைகளல்ல. இதை நான் எவருடைய மனமாற்றத்தைக் கருதியும் எழுதவில்லை. நண்பர்களோடு ஒரு அறைக்குள் இருந்து உரையாடிக்கொண்டிருக்கும்போது, “கிரனைட்“இன் “கிளிப்“தற்செயலாக விடுபட்டுப் போக, அந்தக் கணத்தின் பயங்கரத்தை உணர்ந்து சடுதியான முடிவெடுத்து அதைத் தன் வயிற்றுப் பகுதியுள் வைத்து அதன் மீது கவிழ்ந்து வெடித்துத் துண்டு துண்டான அன்பு என்ற போராளி போன்ற பல்லாயிரம் போராளிகளால் ஆன அமைப்பு அது. அத்தகைய அன்பாளர்களுக்கிடையில் சாதி வேறுபாடுகள் நிலவியது என்பது நகைப்பிற்குரியது. இயக்கத்தில் பெரிய பொறுப்புகளை வகித்த தமிழ்ச்செல்வன், அவரது அண்ணா மூர்த்தி இவர்கள் எல்லாம் வெள்ளாளர்களா?

மேலும், வெள்ளாளர்கள் எல்லோரும் புலியெதிர்ப்பாளர்கள் அல்ல. புலியெதிர்ப்பாளர்கள் அனைவரும் தலித்துகளும் அல்ல என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். மீனவ சமூகத்தைச் சேர்ந்தவராக தலைவர் பிரபாகரன் இருந்தபோதிலும், இயக்கத்தில் விரல்வி்ட்டு எண்ணக்கூடிய அளவு பிராமண சமூகத்தினரும் இருந்தார்கள். வெள்ளாளர்கள் இருந்தார்கள். இந்தச் சாதி என்ற மண்ணாங்கட்டிச் சீரழிவு கீழிறக்கிச் சொல்கிற பள்ளரும் பறையரும் சலவைத் தொழில் செய்கிறரும், நாவித சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இருந்தார்கள். மலையகத்தைச் சேர்ந்தவர்களும் முஸ்லிம்களும் கூட இருந்ததாகச் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

“சோஸ்“என்று அழைக்கப்பட்ட, இயக்க உறுப்பினர்கள் சென்று உணவருந்திய, தொலைதுார ஊர்களிலிருந்து வந்த போராளிகள் தமது வீடுகள் போல சென்று புழங்கும் பல வீடுகளில் யாரும் சாதி பாராட்டியதாக நான் அறியேன். “யார் யாரோ பெற்றெடுத்த பிள்ளைகள்“ஒரே வீட்டுக்குள் படுத்து உறங்கிக் கொண்டிருக்க, வெளியில் இருளில் இராணுவ அசுமாத்தங்கள் தென்படுகிறதாவென காவலுக்கு இருந்த யாரோ ஒருவனின் தாயை நான் அறிவேன். அந்த இரவுகள் சாதியால் களங்கப்படுத்தப்பட முடியாதன.

அதிகம் போவானேன்? எங்கள் வீடு வெள்ளாளர், கோவியர், சாண்டார், பறையர் என பல்சாதியினரும் மணம்முடித்த வீடுதான். திண்ணியமும் வெண்மணியும் அங்கு இல்லை. இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் மனோபாவத்தை விடுதலைப் போராட்டமன்றி வேறேது அளித்திருக்க இயலும்?

”பறைச்சி ஆவதேதடா... பணத்தி ஆவதேதடா
இறைச்சி தோல் எலும்பினும் இலக்கம் இட்டிருக்குதோ...”

என்று மேடைகளில் மேற்கோள் காட்டிக் கூவிவிட்டு கீழிறங்கி சாதித் துண்டைத் தோளில் போட்டு நடக்கும் பொய்மையாளர்கள் அல்ல விடுதலைப் புலிகள். கூட்டு வல்லாதிக்கச் சதிகளால் அவர்கள் புதையுண்டு போயிருக்கலாம். பல்லாண்டு கழிந்த பின்பு மண்ணை முட்டி மோதி ஒரு முளை தள்ளும். சா விழுந்த முற்றங்களில் மீண்டும் பூ மலரும். மறுபடியும் எங்கள் மண்ணில் மாவீரர்கள் கல்லறைகளை எழுப்பி வணங்குவோம். கோயில்கள் என்று தனியாக வேண்டியதில்லை.



No comments: